பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

முருகுசுந்தரம்




கருங்கடலில் பெருந்தீயா!
கதிரவனில் பனிமழையா!
வானில் நீந்தி
வருநிலவில் பெரும்பிளவா!
வற்றாத காவிரிக்கு
வறுமை நோயா!
இருந்தமிழுக் கொருமுடிவா!
இதயத்தில் கொழுவிருக்கும்
காஞ்சி அண்ணாத்
துரைமன்னா! உன்றனுக்கா
சாக்காடு? நாங்களிதைச்
சகிக்க மாட்டோம்!


நல்லர்க்கு நல்லன்நீ!
நாக்காலே தாக்குதல்கள்
நடத்து கின்ற
மல்லர்க்கு மல்லன்நீ!
மதிச்செருக்கால் ஏமாற்றி
மயக்கும் தீய
குள்ளர்க்குக் குள்ளன் நீ!
கொள்கைக்குக் கொடிமரம் நீ!
ஆனால் இன்று
மில்லர்க்கும் எங்களுக்கும்
மிகப்பெரிய ஏமாற்றம்
தந்து சென்றாய்!