பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

55




குத்தா யிரம்பெற்ற
கோவேந்தன் களிற்றைப்போல்
குவித்து வைத்த
புத்தாரப் பூமழையில்
புதையுண்ட உன்னுடம்பைக்
கண்ட மக்கள்
அத்தா! என் றழுதார்கள்!
அண்ணாஎன்! றழுதார்கள் !
ஆனால் நீயோ!
'தொத்தா'என் றழுதவண்ணம்
துணைத்தாயின் இருப்பிடத்தைத்
தேடிச் சென்றாய்!


நாடகத்தாய் பெற்றவெற்றி
நாவலனே! உன்னுடைய
நடிப்பின் வெற்றி!
மேடைத்தாய் பெற்றவெற்றி
மிடுக்கான உன் நாக்கு
மேடை வெற்றி!
ஒடைத்தேன் ஒத்த தமிழ்
ஒச்சுகின்ற வெற்றியுன்கை
எழுத்தின் வெற்றி!
தாடிவைத்த பெரியாரின்
தத்துவத்தின் வெற்றியுன்றன்
தடந்தோள் வெற்றி!