பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை




பூமிக்குள் இருக்கும் ஆணிவேர்மீது
பார்வை வெளிச்சம் படுவதில்லை.
ஆனால்... அந்த வேரே
மரத்துக்கு ஆதாரம்.
அண்ணனே!
சந்தனப் பேழைக்குள்.
சரித்திரத்தை முடித்துக்கொண்ட
உன்மீதும் எங்கள்
விழிவண்டுகள் மொய்ப்பதில்லை.
ஆனால்...எங்கள்
வாழ்வுக்கும் நீயே ஆதாரம்!