பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{} சபாபதி முதலியாரும், பேசும் படமும் நிறுத்தி வைக்க வேண்டியதுதான் அவுங்களே திருப்பி கொண்டுவரது பகீரத பிரயத்னம்தான். வே.ச. எங்க : தொண்டை நோவு வயத்து கோவுண்ணு சொன்ன அதுக்கு மருந்து கொடுத்தா போச்சு! ஜெ. நெஜமான கோயிருந்தால் மருந்து குடிக்கலாம் அவுங்க ளுக்கு வர்ர கோவுங்களுக்கெல்லாம் மருந்து ரொக்கப் பணம்தான். இந்த கஷ்டங்களே யெல்லாம் அனுபவிக் கிறதைவிட ஒருதரம் யமலோகம் போய்விட்டு வரலாம். வே.ச. அப்பப்பா நீ அங்கெல்லாம் போகாதேப்பா இந்த பொம்மனட்டி ஆக்டரெஸ்களே இல்லாத ஒரு படம் எடுக்க வழியை பாரப்பா, ச.மு. சிரித்துக்கொண்டே) என்டாமின்னே என்னுண்ணு ஆம் பிளே ஆக்டெருங்க வாணும்ணே இப்ப என்னண்ணு பொம்மனுட்டி ஆக்டெரங்க வாணும்மிண்றே அப்றம் யாரை வைச்சிகினு படம் எடுக்கறது. வே.ச. படம் எடுக்காதிருக்கிறது. ஜெ. ஆமாங்க சபாபதி சொல்ரதுதான் சரியான யோசனைங்க இந்தப்படம் எடுக்கறவேலேயிலே கையை வெக்காதிங்க நான் சொல்ரேண்னு கோவம் வாணும் உங்களுக்கு. ச.மு. கோவம் ஒண்னுமில்லே ஜெகந்நாத முதலியார் நீங்க என் நல்லதுக்குதானே சொல்ரிங்க-இருந்தாலும் நாரா யண சாமி பிள்ளை எப்படி சமாளிக்கிருர் அவரை கேட்டு பார்ப்போம். பிள்ளைவாள் ஒங்க நாடக கம் பெனியிலே இந்த மாதிரியான கஷ்டம் வர்ரதில்லையா. கா. நான் ஆரம்பிச்சபோது எவ்வளவோ வந்தது தலை மொட்டையா போச்சு ஒரு யுக்தி பண்ணேன் என் ஆக் டரெஸ்களை யெல்லாம் கூப்டேன். இந்த மாதிரி கம் பெனி என்னுல் கடத்த முடியாது. உங்களுக்கு சேர வேண்டிய பணம் ஏதாவது பாக்கி யிருந்தால் வாங்கி கினு ஊட்டுக்கு பூடுங்க இல்லே நாடகம் ஆட ணும்.ண்ணு இஷ்டமிருந்தா கான் சொல்றபடி கேளுங்க ஒரு மாசம் நாடகம் ஆடறது. அதுவரைக்கும் உங்களுக்கு