பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும் 3 : (ராமசாமி நாய்க்கர் வருகிறர்) வே. ச. யாரையா அது? ரா. சபாபதி முதலியார் மானேஜரை பார்க்க வந்தேனுங்க. வே. ச. இப்ப நான்தான் மானேஜர் உக்காருங்க, நான் கேக் கறத்துக்கெல்லாம் பதில் சொல்லுங்க உங்க பேர்? ரா. ராமசாமி நாயக்கருங்க. வே. ச. உங்க ஊர்? ரா. தொறப்பாக்கம். வே. ச. உங்களுக்கு அண்ணன் தம்பிகள் எத்தினி பேர் ? ரா. அதெல்லாம் யாருமில்லேங்க எனக்கு. வே. ச. உங்கள் தகப்பனர் எத்தினி பேர் : ரா. என்னய்யா இப்படி கேக்கறைங்க வே. ச. ஒ. ஆமாமாம் தாயார் எத்தினிபேர் அதையாவது சொல்லுங்க. ரா. என்னய்யாது என் தாயார் ஒருத்தர் தான். வே. ச. ஆமாமாம் இல்லே சின்ன தாயாருங்க யாரானும் இருக்கராங்களோனு கேட்டேன். ரா. அதெல்லாம் யாருமில்லேங்க எனக்கு. வே. ச. உங்களுக்கென்ன சொத்து இருக்குது. ரா. அதெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கய்யா அதையேன் கேட்கிறீங்க. வே. ச. அது ஒரு ரகசியம் அப்புறம் சொல்றேண்னு சொன் ணுரு எங்க எஜமான். - ரா. உங்க எஜமானு' அப்போ நீங்க யாரு-அப்போ நான் அப்புறம் வந்து அவரோட பேசிக்கிறேனுங்க. (விரைந்து வெளியே போகிருன்.) (சபாபதி முதலியார் உள்ளேயிருந்து வருகிருர்) ச. மு. ஏண்டா! சபாபதி யாரோவந்து பேசிக்கினு யிருந்தாப் பலே யிருந்துதே எங்கே காணுேம். வே. ச. சொத்தைப்பத்தி கேட்டேம்பா உடனே டும்கி குடுத் தாரு. - - ச. மு. சரி. உன் இடத்திலே போய் உக்காரு (மணியடிக்கிருர்)