பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும்
வே. சு. ரொம்ப சுலபம்பா நேத்து அண்ணி அவுங்க அம்மா
ஓட்டுக்கு போனபோது -- எம் பொஞ்சாதியையும்
துணையா இட்டும் பூட்டாங்களே உனக்கு தெரியுமே
அது முதலு எனக்கு மனசிலேயோ மார்லேயோ வவுத்து
லேயோ ஒருமாதிரி இருக்குது-- இருந்துதா? உனக்கு
பலகாரம் காபியையும் மெத்திக்கி எடுத்துக்கினு வரும்
போது கூடத்திலிருந்த , பெரிய கண்ணாடியிலே எம்
மூஞ்சை பாத்தென். எம்மூஞ்சி இன்னமோ மாதிரி
அசிங்கமா யிருந்தது--உடனே இங்கே வந்தேனா உன்
மூஞ்சை பாத்தேன்---உம்மூஞ்சியும் அதேமாதிரி இருந்
தது. அதிலேயிருந்து அண்ணி வுட்டுட்டு போயிட்டாங்
'களே உன்னெ அதுக்காக வருத்தப்படறேண்ணு
எனக்கு தெரிஞ்சுது - நான் சொன்னது சரிதானே!
ச. மு. சரிதாண்டா நேத்தும்புடிச்சு ஒருமாதிரியா இருக்குது.
பொழுதே போகல்லை அதுக்கு என்ன செய்யுறது ஒரு
புக்திசொல் பார்க்கலாம்,
வே, *. அப்பா ரேசுக்கு போலாமா ?
5. மு. டேய் இன்னொருதரம் ரேசைப்பத்தி பேசனையா
எனக்கு கோவம் வரும்--அதான் ரேசுக்கு போயி போன
ஞாயிற்றுக்கிழமை கையிலிருந்த தெல்லாம் தோத்துட்டு
வந்தமே இன்னும் என்னடா ரேசு.
வே. ச. ஆமாம்பா நீ சொல்ரது சரிதான், நான்கூட அண்
ணைக்கி நாலு ரூபா தோத்துட்டு வந்தேம்பா. அத்தெ
சொன்னா எம்பொஞ்சாதி கோவிச்சிக்கிவாண்ணு அவ
ளுக்குக்கூட சொல்லலேப்பா. இனிமேலெக்கி அந்த

  • கிண்டி பக்கமே திரும்பிகூட பாக்கமாட்டேம்பா!

சீ. மு. அந்த முட்டும் உனக்கு புத்தி வந்துதே.
வே. ச. எனக்கு மாத்திரம் தானாப்பா ?
ச. மு. (சிரித்துக்கொண்டே) எனக்குக்கூடத் தான்--இப்ப
- சந்தோஷந்தானா உனக்கு.
வே. ச. சந்தோஷம்பா !