பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும் ச. மு. காலமெ எழுந்தா சாயங்காலம் கிளப்புக்கு போற வரைக்கும் பொழுதே போகமாட்டேண்ணுதடா-ஏதா வது பொழுதுபோக்க யுக்தி சொல் பார்க்கலாம். வே. ச. ஏம்பா ஏதாவது புஸ்தகங்களைப் படிச்சிகினுரேன் ! ச. மு. புஸ்தகங்களே ரொம்ப படிச்சா மூளை இளகி போகும் மிண்ருங்கடா. வே. ச. அப்பா, இப்ப தெரியுதப்பா கம்ப தமிழ் வாத்தியார் எம்மூளே கல்லாட்டும் இருக்குதுண்ணு சொன்னதுக்கு காரணம். அப்பா எனக்கு இன்னொரு யுக்தி தோணுது ஒரு காய்வால் எழுதேம்பா ! ச. மு. அதென்னடாது காய்வால். வே. ச. அதாம்பா சின்னகதையெ வச்சிகினு பெரிசா இழுக் கராங்களே! ச. மு. ஒ நாவலா-அது என் மனசுக்கு பிடிக்கலே வேறே என்னமான சொல்லு. வே ச. ஆன ஏதாவது நாடகம் ஆடலாமே. நீ ஏதாவது எழுது. அதிலே ஒன் சிநேகிதருங்க நானு எல்லாம் ஆடரோம்! ச. மு. அது ஒதவாதுடா மின்னே ஒருதரம் எழுதி அதை ஒத்திகை போட்டபோது நம்ப மச்சான் கிர்சாமி பாக்க வந்திருந்தவங்க-எல்லாம் சிரிச்ரார்களேடா அது என் ராசிக்கு ஒத்துவல்லே அதுவுமில்லாத இப்போ நாடக சபைகளெல்லாம் படுத்துகினு துரங்குதுங்களே இந்த சினிமா வந்த பின்பாக எல்லாம் சினிமா மயமா யிருக் கிறது, வே. ச. அப்பப்பா, அப்போ நீ ஒரு சினிமா தயார் பண்ணுப்பா ! ஜெகங்காத முதலியார் வருகிருர் ச. மு. வாங்க ஜெகந்நாத முதலியார் சரியான வேளைக்கித் தான்வந்தீங்க. பொழுது ப்ோக்கரதுக்கு நம்ப சபாபதி நான் ஒரு சினிமா ஆரம்பிக்கணும்னு சொன்னன். எனக்