பக்கம்:சமணமும் தமிழும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சமணமும் தமிழும் கிற கால்முகாபனார் கோயில்' என்பதும் சமணக்கோயி வாக இருக்கக்கூடும். ஏனென்மூல், அருகக் கடவுளுக்கு நான்முகன்' (நான்கு அதிசய முகங்கண்புடையவர்) என்ற பெயர் கூறப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூர் : (பாடலிபுரம்) திருப்பாப்புலியூர் என வழக்கப்படும். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள். னது. கடலூர் என்பதும் இதுவே. இது பண்டைக் காலத்தில் பாடலிபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. இங்கு முற்காலத்தில் சமண மடமும் சமணக் கோயிலும் இருர் தன. இந்தப் பாடலிபுரத்துச் சமண மடம் மிகப்பழமை வாய்ந்தது. சர்வாந்தி என்னும் சமண முனிவர் இந்த மடத்தில் தங்கியிருந்தபோது லோகவிபாகம் என்னும் நூலை அர்த்தமாகதியிலிருந்து வடமொழியில் மொழி பெயர்த்தார். இது, சசு ஆண்டு 380-இல் (கி.பி. 458இல்-) காஞ்சியில் அரசாண்ட சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னனுடைய 22- ஆவது ஆண்டில் எழுதப்பட்டது என்று அந் நூல் கூறுகிறது. (Mysore Archaeoligical Report, 1909-10. Page 45, 46) இப் பாடலிபுரச் சமண மடத்தில் கல்விகற்றுப் பின்னர் இரு மடத்தின் தலைவராக வினங்கியவர் தருமசேனர் என்பவர். இவர் , பிறகு சைவ மதத்தில் சேர்த்து அப்பர் எனப் பெயர் பெற்றார். இங்கிருந்த சமண மடத்தை இடித்து அக்கற்ககாக் கொண்டுபோய், திருவ திகையில் குண தாவிச்சுரம் என்னும் கோயிலைக் *குணபரன்' என்னும் அரசன் கட்டினான் என்பர். இக்குச் சமணர் கோயில் இருந்த தென்பதை உறுதிப்படுத்த, மஞ்சக்குப்பம் சாலையில் யாத்ரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது. இது அடி உயரம் உன்னது. நின்டிவனம் : திண்டிவனம் தாலூகா. இங்குள்ள தோட்டம் ஒன்றில் முக்குடையுடன் வீற்றிருக்கும் சமண 1. பெரியபுராணம் : திருசாவுக்கரசு சுவாமிகள் புராணம் 2. டிவ o 146. 3. South Arcot De, Gazettorr. p. 35.