பக்கம்:சமணமும் தமிழும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சு. ஆருகத மதத்தை ' இந்த மகத்தில் புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று கூறிப் பௌத்த மதத்தை இந்து மதத்தில் சேர்த்துக்கொண்டு பின்னர், காலப் போக்கில் அந்த மதத்தை அழித்து விட் டது போல, சமண மதத்தையும் இந்து மதத்தில் இணைத் துக் கொள்ள இந்துக்கள் பண்டைக் காலத்தில் முயன் நனர். இதன் பொருட்டு, திருமால் சமண மதத்தைப் போதித்ததாகக் கதை கற்பித்துக்கொண்டனர். சமண மதத்தை 'இந்து' மதத்தின் கிளைமதமாக இணைத்துக் கொள்ள அவர்கள் செய்த முயற்சிகள் சில புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வாம். விஷ்ணு புராணத்தில் கீழ்க்கண்ட கதை கூறப்படு கிறது - அசர்க்கும் தேவர்க்கும் நடைபெற்ற போரில் அசார் தேவரை வென்றனர். தோற்று ஓடிய தேவர் பாற் கடலின் வடபுறஞ் சென்று ஆங்குத் திருமாக வணங்கித் தமது தோல்வியைக் கூறி, அசுரரை வெற்றிகொள்ளத் தமக்கு உதவி செய்யுமாறு அவரை வேண்டிக்கொண்டனர். தேவரது வேண்டுகோளுக்கிணங்கிய திருமால் அவருக்கு உதவி செய்ய உடன்பட்டுத் தமது உடலினின்று பாபா போகர் என்பவரை உண்டாக்கி, அசுரரை மயக்கி வரும்படி அனுப்பினார். அக்கட்டளைப்படியே சென்ற மாயாமோகர், தமது உடைகணக் களைந்து தலையை மழித்துச் கையில் மயிற்பீலி பிடித்து அசுரர் வாழ்ந்திருந்த கருமதை ஆற்றக் கரைக்கும் சென்று அவ்வசுரருக்கு ஈக்ன (சமண) மதர் தைப் போதித்து அவரை அருகதர் ஆக்கினார். பின்னர், மாயாமோகர் செம்பட்டாடை (சிவம்) அணிந்து எஞ்சி வின்ற அசார்க்கு அகிம்சையை (பௌத்த மதத்தைப் 1. சருமதை ஆற்றங்கரையிலும் அதைச் சூழ்ந்த இடங்களி ஓம் சமண மதம் பண்டைக் காலத்தில் செழிப்புற்றிருந்த செய்தி ஆக்குக் கிடைக்கும் லொசாசனங்களாலும் சிற்ப உருவங்களாலும் தெரிய வருகிறது.