பக்கம்:சமணமும் தமிழும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சமணமும் தமிழும்


கொல்லச் சொல்லவும் மாட்டேன்; கொல்ல நினைக்கவுமாட்டேன்; மற்றவர் கொல்வதற்கும் மனம் மொழி மெய்களால் உடன்படவும் மாட்டேன்," என்று உறுதி கூறி சமண முனிவர் அகிம்சா விரதத்தை மேற்கொள்கிறார்.

2. வாய்மை: அஃதாவது பொய்யாமை. “பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை” என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். சமண் சமயக் கொன்சைப்படி, வாய்மை என்பது, மேற்கூறிய அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவன் ஓர் உயிரைக் சொல்லத் துணிவானாயின், அவ்வமயம் பொய் சொல்லியாகிலும் கொலையினின்றும் அவ்வுயிரைக் காப்பாற்ற வேண்டியது, சமணத் துறவியின் கடமையாகும். ஓர் உயிரைக் காப்பாற்றப் பொய் சொல்லுவது வாய்மை யினுள் அடக்ங்ம் என்பது சமணரின் ஓத்து. இக்காரியத்துக்காக மட்டும் பொய் சொல்லலாமே தவிர மற்றப்படி, சமணத் துறவிகள் சிறிதும் பொய் பேசக்கூடாது என்பதும், மனம் மொழி மெய்களால் மெய்பேசுவதை மேற்கொண்டொழுக வேண்டும் என்பதும் சமண சமயக் கொள்கையாகும். வாய்மையைப் பற்றி நீலகேசி (மொக்கல, 60-ஆம் செய்யுள்.) உரையில் கூறப்பட்ட செய்தி ஈண்டு குறிப்பிடத்தக்கது:

“என்னை ?

“பொய்மையும் வாய்மை மிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்” (குறள்: ௨௧௨)

என்பது எம் (சமணரின்) ஓத்தாதலால், பிராணி பீடா நிவர்த்தியார்த்தமாகப் பொய்யுரைத்தலும் ஆவதாகலின் என்பது ....... ஆகலின் நன்மை பயக்கச் சொல்லும் பொய் குற்றமன்றென்பது”

நான் எப்பொழுதும் மெய்மையே போவேன்; ஒரு போதும் பொய் பேசமாட்டேன்; பிறர் பொய் பேசுவதை உடன்படமாட்டேன்; பிறரைப் பொய் பேசத் தூண்ட