பக்கம்:சமணமும் தமிழும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருகதரின் இல்லற ஒழுக்கம் 81 சிட்சா விரதங்களையும் சேர்த்து இல்லறத்தாரின் ஒழுக்க மாகக் கூறுவதும் உண்டு, எ பெரியசொல் பொய்களவு பிறர்மனேயி லொருவல் பொருள் வரைதல் மத்தம்மது புயேசணலின் கீல்கல் பெரியதிசை தண்டமிரு போகம்வரைச் தாடல் மரீஇயக்கை நான்குமிவை மனையறத்தார் சிலம்" என்பது மேருமந்தர புராணச் செய்யுள் (பத்திர மித் திரன் அறக் கேள்விச் சருக்கம் 138). இதில் பின் இரண் டடிகளில் கூறப்பட்ட ஒழுக்கங்களை விளக்குவோம். தினசவரை தல் என்பது திசை விரதம். எட்டுத் திசைகளிலும் ஒரு வரையறை செய்துகொண்டு அந்த வரையதைக்கு அப்பால் எக் காரணத்தை முன்னிட்டும் போவதில்லை என்று விரதம் செய்து கொள்வது, இந்த விரதத்தைத் துறவிகள் கொள்ளக் கூடாது, தண்டம் வரைதல் என்பது அனர்த்த தண்ட விரதம். இது நான்கு விதம். 1. பிறர்க்குத் தீங்கு நினையா திருத்தல் : 2, அசட்டைத்தனத்தினால் பூச்சிகளைச் சாக லைக்கா திருத்தல் ; அதாவது பால், எண்ணை, நீர் முதலிய வத்தை மூடி வைக்காதபடியால் *, எறும்புகள் விழுந்து இதக்கின்றன. இவ்வா. சேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 6. கத்தி முதலிய ஆயு தல்களினால் பிற ரூக்குத் துன்பம் ஏற்படுவதனால் அவ்லித ஆயுதல்கள் வைத்துக் கொள்ளாமல், எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வதோடு அவற்கும் பிற ருக்குத் துன்பம் நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 4. தன்னுடைய செல்வாக்கு பலம் முதலியவற்றை உபயோகித்துப் பிதருக்குத் தீமை செய்யாதிருத்தலும் பிறரைத் தீமை செய்யத் தூண்டா திருத்தலும் ஆம். இருபோகம் வரைதல் என்பது போசோப போக பரிமாண விரதம். அதாவது போகப் பொருள்களை வரை யறுத்தல், உடுத்தும் உடைகள், உண்ணும் பழங்கள் காய்