பக்கம்:சமணமும் தமிழும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமணசமயம் சிறப்படைந்த வரலாறு பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி சிலைபெற்றிருந்தது. பரவியிருந்தது மட்டு மல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றி தழைத்துத் தளிர்த்து இருந்ததைத் தேவாரம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவின் பாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்க காலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலே ஆங்காங்குக் காணப் படுகிற கல்வெட்டுச் சாசனங்களும் அழிந்தும் அழியா மலும் காணப்படுகிற சமணக் கோயில்களும் சாடுமேடுகனில் ஆங்காங்கே காணப்படுகிற சமணசமயத் தீர்த்தங்கரர் கனின் திருவுருவங்களும் சான்று கூறுகின்றன. சமண சமயும் தமிழ்நாட்டிலே என் செல்வாக்கடைந்தது? ஏன் செழித்து வளர்த்தது? பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப் பான்மை பண்டைக்காலத்தில் சமணசமயத்தில் இல்லை. எக்குலத்தவனாபிலும், தமது சமயக் கொள்கையைப் பின் பற்றுவனாயின் அவனைச் சமணர் போற்றி வந்தனர். அவ ருடைய அருங்கலச் செப்பு என்னும் நூலிலே, "பதையன் மகனெனிலும் காட்டு யுடையான் இறைவன் எனஉணரற் பாற்று" என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, பண்டைக்காலத் திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதி பேதம் பாராட்டாத சமண சமயம் பாவியதில் வியப்பில்லை, மேலும், உணவு அடைக்கலம் மருந்து கல்வி என்னும் கான்கு சானல்களைச் செய்வதைச் சமணர் தமது பேரற மாகக் கொண்டிருந்தார்கள், இந்த நான்கினையும் அன்ன தானம், அபயதானம், ஔடத்தானம், சாத்திர தானம் என்று கூறுவர். உணவு இல் காத ஏழை மக்களுக்கு உண்டி கொடுத்துப் பசிகோயைப் போக்குவது தலைசிறந்த