பக்கம்:சமணமும் தமிழும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் வைணவராக மாறிய சமணர் தமது சமண சமய ஒழுக்கம் களையும் கொள்கைகளையும் இந்து மதத்தில் புகுத்தி விட்டார், ஏற்கெனளே, திராவிட வைதீக மதங்களின் கொன்சைகள் கலக்கப்பெற்றுப் புதிய உருவடைந்த இந்து மதத்தில் இன்னும் புதியதாகச் சமணக் கொன்கை சளும் கலக்கத் தொடங்கின. இதனோடு நின்றபாடில்லை. இக்காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்த பௌத்த மதத் தினரும் இந்து மதத்தோடு சேரத் தொடங்கி அவர்களும் தமது சமயக் கொள்கைகளிற் சிலவற்றைப் புதிய இந்து சமயத் துடன் சேர்த்திவிட்டார்கள். இவ்வாறு, இந்து மதத்தில் புதிய புதிய கொள்கைகள் கலக்கப்பெற்று இந்துமசம் பலவாறு மாறுதல் அடைந்து கொண்டிருந்தது. சமணர் சைய வைணவதாக இந்திமதத்தில் புகுத்திய சமணசமயக் கொன்கைகளை - இந்து மதத்தில் சமண சமபக் சொன்கைகன்' என்னும் அதிகாரத்தில் காண்க. இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் அபூசம் வேளாளர்' என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமண ராக இருந்து பின்னர் சைவராக மாறியவர். இவர் றேணித்து சிவனை வழிபடுகின்றன ராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங்களையும் ஒழுதி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 'மஞ்சுபுத்தார் செட்டிகள்' என்ற ஒரு வகுப்பார் உனர். இவர்கள் இப்போது சைவர்கன். அனால், வெள்ளிக்கிழமை தோறும், இன்யான்குடி சிவன் கோவிலுக்கு வெளியே பள்ள 'அமணசாமி'பைத் தொழுது வருகின் றனர். இந்த சுமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லு கின் றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமாராக இருந்தவர் கனே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள. தமிழும்' என்னும் தூவிற் காண்க.