பக்கம்:சமணமும் தமிழும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்

சமணசமயக் கொன்கைகளில் சில இப்போதும் இந்துமதத்தில் காணப்படுகின் தன. சமணசமயக் கொன் சைகள் ரெண்டு வழியாக இந்துமதத்தில் சேர்த்திருக்க வேண்டும். இந்துமதம் மேலோங்கிச் சமணசமயம் குன்றிய போது, சமணர்கன் இந்துமதத்தை மேற்கொண்டு இந்துக் கனாக மாறியபோதிலும், தாம் முன்பு மேற்கொண்டிருந்த சமணசமயக் கொள்கைகளையும் விடாமல் ஒழுகிவந்தது ஒன்று. சமணசமயத்தை அழித்த இந்துமதம், சமண சமயத்தின் சிறந்த கொள்கைகள் சிலவத்தைத் தன் கொள்கையாக ஏற்றுக்கொண்டது மற்றொன்று. இவ்வாறு இரண்டு வழிகளில், சமணசமயக் கொள்கைகள் இந்து மதத்தில் கலந்துவிட்டன. இந்துமதத்தில் காணப்படுகிற சமணசமயக் கொள்கைகளை ஆராய்வோம். ஊன் உண்ணாமை : இந்தக் கொள்கையை இந்து மதம் சமணசமயத்தினிட மிருந்து பெற்றுக்கொண்டது. பண்டைக்காலத்தில் தமிழர், முருகன் சொந்தவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழி முதலியவற்றைப் பலியிட்டு வணங்கியதோடு, ஊன் உணவையும் உட்கொண்டுவந்தனர். இதற்குச் சங்க நூல்களே சான்குைம். ஆரியரும் (பார்ப்ப னரும்) பண்டைக்காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு மாடு குதிரை முதலியவற்றைக் கொன்று பலியிட்டுவந்ததோடு புலா அணவைப் புசித்து வந்தனர். ஆரியப்பார்ப்பனர் ரிஷிகளுக்கு விருந்து செய்யும் போதும், சிராத்தம் செய்யும்போதும் கன்றுக்குட்டி, ஆடு, மான், முயல், உடும்பு முதலிய பிராணிகனின் மாமிசத்தைச் சமைத்து உண்டனர். எத்தனை வகை பாமிச உணவைச் சமைக்கிறார்களோ அத்தனை உயர்வாக மதிக்கப் பட்டது அவர்களுடைய விருந்து, இதற்கு அவர்களுடைய வேதம் இதிகாசம் முதலிய நூல்கனே சான்றாகும். இக் -1. இந்து மதம் என்று இக்குச் சறுவது சைவவைனம் மதங்களை,