பக்கம்:சமணமும் தமிழும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சமணமும் தமிழும் படித்துச் சதுர்த்தசியன்று நள்ளிரவு என்பதும் சமண சமயக் கொள்கை. சமணர்கள், சைவசமயத்திலே பிற் கானத்தில் சேர்ந்தபோது, தமது பழைய சிவராத்திரி வழிபாட்டைச் சைவசமயத்தில் புகுத்தியிருக்கலாம். அல்லது, ஆதிகாலத்திலிருந்தே சிவராத்திரி வழிபாடு சைவசமயத்தில் இருந்தது என்று கதினால் அதை மறுத் துக்கற பாகொரு சான்றும் கிடையாது. அப்படியானால், சமணர்களுக்கும் சைவர்களுக்கும் சிவராத்திரி வழிபாடு தொன்றுதொட்டு இருந்து வருகிறது என்று கருத வேண்டும்; இதனால், மிகமிகப் பழைய காலத்தில் இரண்டு சமயங்களும் ஒன்றுபட்டிருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு, மோட்சமாகிய வீட்டிற்குச் சிவகதி என்றும், சிவபுரி என்றும், அருகக்கடவளுக்கு சிவகதி நாயகன், சீவன் என்றும் பெயர்கள் கூறப்படுவதைச் சமணசமய நூல்களில் பெரிதும் காணலாம். அதுபோலவே, தேவாரம் முதலிய சைவசமய அல்களிலே வீடுபேறு சிவகதி என்று கூறப்படுகிறது. திருக்கயிலாயமலை: கபிலையங்கிரி என்னும் திருக் கயிலாயமலை இமயமலைக்கு வடபுறத்திலே திபெத்து நாட் டில் இருக்கிறது, இதற்கு வெள்ளியங்கிரி என்னும் பெயரும் உண்டு, பனிச்சுட்டியால் நிறைந்துள்ள இந்த பல இரவும் பகலும் வெண்மைநிறமாக வெள்ளி போல் காணப்படுவதால் இதற்கு இப்பெயர் வாய்ந்தது. சமணர் சுளுக்கும் சைவர்களுக்கும் இந்த மலை புனிதமான திருப் பதியாகும் சிவபெருமான் இந்த மலையில் எழுந்தருளி யிருக்கிறார் என்றும், இங்குள்ள சிவபெருமானை வணங்கு வதற்காகத் திருகாவுக்கரசர் புறப்பட்டுச் சென்று, இக் சட்டான வழியில் செல்லமுடியாமல் திரும்பி வந்துவிட் டார் என்றும் புராணம் கூறுகிறது. சுந்தரமூர்த்தி காய குரும் சேரமான் பெருமான் காயனாரும் முறையே யானை மீதும் குதிரை மீதும் அமர்ந்து ஆகாயவழியாக இக் கயில் பன்க்குச் சென்றார்கள் என்றும், காரைக்கால் அம்மையார் இம்மலைக்குச் சென், இவ்விடத்தைக் காலினால் மிதிக்க