பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

ரகுமான்

பிள்ளைகள் வேண்டுமென்று பெண்கள்
அரசு சுற்றியது அக்காலம்!
பிள்ளைகள் வேண்டாமென்று
அவர்களை அரசு சுற்றுவது
இக்காலம்!

உங்களை
முதலில் என் மார்பில் தவழவிட்டு
இறுதியில் வயிற்றில் ஏந்தும் நான்
உங்கள் தாயின் எதிர்ப்பதம்!

மேத்தா

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லாக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழி சேனை
பண்டித பவனி
இவை எதுவும் இல்லாத
கருத்துகள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக் கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை!............

இந்த
பூமி உருண்டையைப்
புரட்டி விடக் கூடிய
நெம்புகோல் கவிதையை
உங்களில் யார் பாடப் போகிறீர்கள்?