பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பாட்டுடைத் தலைவர்களைப் புகழ்ந்து பாடி உதவி பெறுகிறார். அதன் மூலம் தமது கடன் தொல்லைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு, கையிலும் ஏராளமாகப் பணம் பெறுகிறார். இவ்வாறு உதவி பெற்றவர் சென்னை நகரிலுள்ள தம் மனைவிக்குத் தந்தி கொடுக்கிறார்; அதாவது தந்தியைத் தூது விடுக்கிறார். இதுவே நூலில் காணப்படும் கதாம்சம்.