பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ஆசீர் கழும்! திகளைக்கூட களைக்கூட, தலைக்கடியிலிருந்து உருவிப் பிடுங்கிவிடும்! இதோ இந்த மஞ்சள் நிறமான அடிமை, மதங்களை யெல் லாம் பின்னிப் பிணைக்கவும் செய்யும்; பேர்த்துப் பிடுங்கவும் செய்யும்! ' மாபாவிகளையும்கூட, இது மன்னித்து ஆசீர் வாதம் செய்யும்! தீராத குஷ்டரோகிகளைக்கூடத் தெண்ட னிட்டுப் போற்றிப் புகழும்! திருடர்களுக்கு அந்தஸ்து வழங்கும்! அவர்களுக்குப் பட்டமும் பதவியும் தேடித்தந்து, சட்டமன்றத்திலே ஜனப்பிரதி நிதிகளோடு சரிசமானமாக வீற்றிருக்கவும் சம்மதம் அளிக்கும் இந்தப் பொன் மூப்பும் நரையும் தட்டிய மூதாட்டியரான வி தவைகளைக்கூட,

  • மறுமணம் செய்து கொள்ளத் தூண்டிவிடும்! வாய்லெடித்

தொழுகும் மேக ரணங்களும், வைத்தியசாலைகளும்கூடக் கைகழுவிவிட்ட கழிசடைப் பெண்ணுக்கு, களப் கஸ்தூரி களைப் பூசி, அவள் வாழ்வில் வசந்தகாலம் மறுமுறையும் வந்து போக வழிசெய்யும்!...பாழாய்ப்போன. . உலகமே! மனித குலத்தின் பொதுமகளான பொன்னே! தேசா தேசங்களுக்குள்ளே பேதா பேதத்தையும் குரோத விரோ தத்தையும் உண்டாக்குகின்ற விலைமகள் நீ!... " "மன்னர்களைக் கொன்று களிப்பதும் நீ! அப்பனுக் கும் மகனுக்கும் ஆகவொட்டாமல் செய்யும் பேதமும் நீ! கன்னி மகளிரின் புனிதமான மஞ்சத்தைக் கறைப் படுத்தும் வல்லமையும் நீ! வீராவேசம் கொண்ட யுத்த தேவதையும் நீ! என்றென்றும் மாறாத இளமையும் புதுமையும் கொண்டதும் நீ! காதலிப்பதும் நீ! காதலிக் கப்படுவதும் நீ! உனதாட்சியால் தோன்றும் கன்றிச் சிவந்த கன்னத்தின் செம்மையிலே, கன்னிமை விரதம் கொண்ட பெண்ணரசியின் கட்டுறுதியெல்லாம் பனி . யாய் உருகியோடிவிடும்! நீதான் கண் கண்ட தெய்வம்! ஒன்றோடொன்று முரண்பட்டு', நிற்பதையெல்லாம்கூட, ஒன்றுகூட்டி வைக்கின்ற ஐக்கிய சக்தி நீ! முத்தமிட்டுப் பிணையச் செய்வதும் நீ . ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ் வொரு மாதிரியாகப் பேசும் நாவன்மை கொண்டதும் நீ!