பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



“மனிதனுக்கு மனிதன் வேற்றுமை உண்டு. ஒருவன் யுக்தி மற்றவனுக்குச் சரிப்படாது. ஒருவன் தான் பேசுவதுதான் நியாயம் என்றால், அவன் நியாயத்தை மீறினவனாகிறான். இதனால் அநியாயங்கள் உலகத்தில் தலைவிரித்தாடும். அரசியல் அல்லது சில்லறைக் கிளர்ச்சியில் பற்றுடையவர்கள் இதைக் கவனித்தல் நலம்”. (நல்லவரன் — தாகூர் பக். 81)

அடுத்து, மனித உலகத்தை அலைக்கழிக்கும் மிகப்பெரிய சிக்கல் வெற்றி - தோல்வி என்பவைகளாகும். நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. வெற்றி - தொடர் வெற்றிகளாக ஒருபோதும் இருப்பதில்லை. தோல்விகளும் அவ்வாறே.

ஆதலால், வெற்றி — தோல்விகளைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் எது நடக்க வேண்டுமோ அது நடக்கத் தக்க வகையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த இனிய நல்ல முயற்சி தோல்வியடிையு. மென்று அச்சப்பட்டுக் காரியத்தை விட்டுவிடக் கூடாது.

தோல்விகளும்கூடி எதிர்பார்த்து நிகழ்ந்தால் வெற்றிகளைப் போல கருதிக் கொள்ள முடியும். “தோல்விகள் வெற்றிகளின் படிகள்” என்ற பழமொழியை எண்ணிக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தினை ஜெயகாந்தன் தமது ‘யுகசந்தி’யில் விளக்குகிறார்.

“வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான்”.

(யுகசந்தி — ‘தர்க்கத்திற்கு அப்பால்’
ஜெயகாந்தன் பக், 99)