பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 43


வரி கொடுப்போரது வளர்ச்சிக்கும் நலனுக்கும் உத்தரவாதம் தராது, அவர்களை நெறியல்லா நெறிகளில் திருப்திப்படுத்துவதும் தாஜா செய்வதும் மக்களாட்சியன்று, என்றும் பேந்தரே கூறுகிறார், கேளுங்கள்!

விவேகம் இல்லாத ஜனநாயகத்தைச் சாடுகிறார். முனிசிபல் கவுன்சிலர்களுக்காக அவர் தயாரித்துள்ள விதிகள் வருமாறு:

“தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரண்டு கவுன்சிலர்கள் ஒரே பேட்டையில் ஒரே தெருவில் இருக்கக் கூடாது. அப்போதுதான் எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்களோ அத்தனை தெருக்களாவது நமது நகரில் சுத்தமாக இருக்கும் என்ற உத்தரவாதமாவது, வரி கொடுப்போருக்கு இருக்கும்.”

(—இன்றைய இந்திய இலக்கியம் பக். 125)


நம்முடைய நாட்டு மக்களுக்கு வறுமையும் ஏழ்மையும், இழிவும் அவமானமும் இயல்பாகப் போய்விட்டன. அவர்கள் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. உண்மையாகச் சொன்னால் இப்போது நம்மிலே பலருக்குச் சூடும் இல்லை; சுரனையும் இல்லை,

நம்முடைய அவமானங்களையும் இழிவுகளையும் தாங்கியே ஆகவேண்டும் என்று மருட்டுகின்ற மதத் தலைவர் விதித்த தலைவிதித் தத்துவத்தினின்றும் இன்னும் நாம் விடுதலை பெற்ற பாடில்லை. இன்னமும் நம்முடைய மூளைபை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பழைய பஞ்சாங்கம்தான்.