பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கொடுமைகளை எதிர்க்கும் துணிவு நமக்கு என்று வரும்? நாம் இந்தத் தலைமுறையில் புரட்சியாளர்களாக ஆகமுடியுமா? ஒருநாலும் முடியாது. ஏனென்றால் நாம் புரட்சி என்ற சொல்லையே பொருள் புரியாமல் கொச்சைப்படுத்தி விட்டோம். “கொடுமையை எதிர்த்துப் போராடு” என்று மக்களுக்குப் பாடம் புகட்டி, இதனை உணர்த்த நாம் வணங்கும் தெய்வங்களின் கைகளில் கருவிகளைத் தந்தனர்.

ஆனால், இன்று நாம் செய்வதென்ன? அத்தெய்வங்களின் கைகளில் இருக்கும் கருவிகளிலும்கூட எலுமிச்சம் பழத்தைச் செருகி, முனையை மழுங்கச் செய்து கொண்டிருக்கிறோம். பாரதி நமது மூடத் தனத்தைப் பார்த்தான். ருஷ்ய நாட்டுப் புரட்சியை நமது கவனத்திற்குக் கொண்டு வருகிறான்.

சோவியத் ரஷ்யாவில் புரட்சி செய்து வெற்றி கண்டது போல்ஷ்விக் படைதான். ஆனாலும் பாரதி, “மகாகாளி பராசக்தி கடைக்கண் வைத்த”தால் நிகழ்ந்தது புரட்சி என்று பாடுகிறான். ஏன் இங்ஙனம் பாடுகிறான்? மாகாளியே புரட்சி செய்தாள் என்றால், இந்தியரும் எழுந்து நின்று புரட்சி செய்வார்கள் என்று நம்பினான்.

ஆனால் நம்நாட்டு மக்களோ மிகவும் கெட்டிக் காரர்கள்! கடவுளைக் கும்பிடுவார்கள்; காணிக்கை செலுத்துவார்கள்; அப்பமும் அவல் பொரியும் படைப் பார்கள். ஆனால், கடவுள் சொன்னதை சத்தியமாகச் செய்வதில்லை என்று விரதம் பூண்டிருக்கிறார்கள். பாரதி,