பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 83

பாரதி, காலத்தை உருவாக்கிய கவிஞன்! பாரதி ஒரு சகாப்தம் பாரதியின் சிந்தனைகள் உரைநடையில் சிறந்து விளங்குகின்றன. பாரதி, ஒன்றுபட்ட இந்தியாவை - பிரிக்கப்படாத இந்தியாவை தரிசனம் செய்கிறான்! நம்மையும் தரிசனம் செய்யுமாறு செய்கிறான்.

பாரதத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு ஜாதி! அதுதான் பாரத ஜாதி என்று கூறுகிறான். பாரதம் ஒரு பழைய நாடு பாரத நாட்டில் ஒரு நவீன உணர்ச்சி வளர்ந்து வருவதை பாரத உணர்ந்து வரவேற்கிறான். தேச பக்தியின் அவசியத்தை உணர்த்துகிறான். பாரதி, இந்து சம்பிரதாயத்தை நம்பி வரவேற்கிறான். ஆனால் சமத்துவத்திற்கும் - சமரசத்திற்கும் உடன் படாதவையை மறுக்கிறான்.

பாரதியின் பேச்சும் மூச்சும் சமத்துவம், சமரசம் ஆகிய கொள்கைகளாகும். சமத்துவம், சமரசம் பாரதியின் தடம்! பாரதி தடத்தில் நாம் அனைவரும் செல்ல வேண்டும்!

பாரதியின் தடம் அன்பு, அறம், ஆண்மை, வீர்யம், சமத்துவம்! இந்தத் தடத்தில் அடிமாறாது நாம் சென்றால் நாடு வளரும்!


口 திருச்சிராப்பள்ளி வானொலி, இலக்கியப் பேருரை 10-9-93.