பக்கம்:சமுதாய வீதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 1 0 1

வேண்டுமென்று திடீரென்று இப்போதுதான் நீங்கள் கண்டிக்கப் புறப்படுவது என்னவோ போலிருக்கும். அது வேண்டாம்-என்றாள் மாதவி. அவளைப் பரிமாறச் சொல்லியது. கைகழுவத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லியது ஆகியவற்றைப் பற்றி நண்பன் கோபாலி டம் தான் கண்டிப்பதோ, விசாரித்துப் பேசுவதோ மாதவி யைப் பாதிக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது, கோபாலையும் நாளாக நாளாகத்தான் முத்துக்குமர னால் கணித்துப் புரிந்து கொள்ள முடிந்தது. வந்த முதல் தினத்தன்று சந்தித்த கோபாலிடம் எவ்வளவு பெருந் தன்மை இருந்ததாக அவனுக்குத் தோன்றியதோ அந்தப் பெருந்தன்மை அவ்வளவும் தவறான கணிப்பு என்று இப் போது தோன்றியது, வெளியில் பெருந்தன்மை உடைய வனைப் போல தோன்றினானே ஒழியக் கோபாலனிடம் உள்ளுற வஞ்சகமும், சிறுமையும், தற்பெருமையுமே நிரம்பியிருப்பதையே கண்டான் முத்துக்குமரன். சென் னையைப் போன்ற பெரிய நகரங்களில் மனிதர்களின் பெருந்தன்மையைப் பற்றிச் சராசரி வெளியூர்க்காரனுக்கு ஏற்படுகிற ஆரம்பகால அநுமானம் நாட்பட நாட்படப் பொய்யாகி விடுகிறது என்பதை முத்துக்குமரன் இப் போது புரிந்துகொண்டிருந்தான். பெருந்தன்மையும், கரு ணையும், அன்புமே முதலில் தெரிந்து அவற்றின் காரணங் கள் பின்னால் போகப் போகத் தெரியும்போது முதலில் ஏற்பட்ட அநுமானமும், கணிப்பும் தவறோ என்று தயங்க லேண்டியிருக்கிறது. கோபாலைப் பொறுத்த அளவில் இப்போது அதே தயக்கம்தான் முடிவாக முத்துக் குமரனுக்கு ஏற்பட்டிருந்தது. . .

சமூகத்தில் நாகரீகமடைந்த வி தி க ள் எல்லாம். அழகாகவும் அலங்காரமாகவும் பட்டினத்தில் தோன்றி னாலும்-அந்த வீதிகளில்-வீடுகளில் ஆற்றல் நிறைந்த சந்தர்ப்பவாதிகளும், கொடியவர்களும், ஆ த ர வ ற் ற

7 سس۔ rی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/103&oldid=560899" இலிருந்து மீள்விக்கப்பட்டது