பக்கம்:சமுதாய வீதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி j 0.3

தென்று விசாரித்து முத்துக்குமரனுக்கு ஒரு கடிதம் வந்தது.

அந்தக் கடிதம் தன் கைக்குக் கிடைத்த சமயத்தில் முத்துக் குமரன் நாடகத்தின் கடைசிக் காட்சியில் எல்லாருமாகச்

சேர்ந்து பாட வேண்டிய பாடலையும் எழுதிக் கொண்டி

ருந்தான். அடுத்த நாள் காலையில் முத்துக்குமரன் வரை யில் நாடகம் எழுதப் பெற்று முடிந்துவிட்டது. மாதவி தான் டைப் செய்து முடிக்க வேண்டியிருந்தது, அவளும் காலையிலிருந்து நண்பகல் வரை டைப் செய்வதற்கான வேலைதான் மீதமிருந்தது. அவள் கான்லயில் டைப் செய்ய வந்தபோது 'ஹேர் கட்டிங்குக்காக முத்துக்குமரன் ஸ்லூ னுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். சென்னை வந்த திலிருந்து முடிவெட்டிக் கொள்ளாததாலும். அதற்கு முந்தி யும் ஒரு மாத காலமாக முடி வளர்ந்து காடாகியிருந்ததா லும் அவன் அன்று கண்டிப்பாக அந்தக் காரியத்தை முடித் துக்கொண்டு வந்து விடுவதென்று கிளம்பியிருந்தான். போகும்போது, 'நான் திரும்பி வருகிறவரை டைப் செய் பப்போதுமான வேலை உனக்கு இருக்கிறது. நீ டைப் செய்து முடிப்பதற்குள் நான் ஸ்லூனிலிருந்து அநேகமா கத் திரும்பி வந்துவிடுவேன்' என்று மாதவியிடம் அவன் சொல்லிவிட்டுத்தான் போனான்.

கோபாலின் டிரைவர் பாண்டி பஜாரில் ஒர் ஏர்க் கண்டிஷன் செய்த நவநாகரிக ஸ்லூனின் முன்னால் கொண்டுபோய் முத்துக்குமரனை இறக்கிவிட்டான். முத்துக்குமரன் உள்ளே நுழைந்ததுமே-முன் பகுதியில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது அந்தக் காத் திருக்கும் இடத்தில் தமிழ்த் தினசரிகள், வார, மாத சினிமா இதழ்கள், ஆங்கில இதழ்கள் எல்லாமாக ஒரு குட்டி லைப் ரரியே இருந்தது. மேலே சுவரின் நாற்புறமும் குளிக்கிற .ே ப ன் க ளி ன் காலண்டர்களும்-குளிக்காவிட்டாலும்குளிப்பதைவிடக் குறைவாக உடையணிந்த பெண்களின் ஒவியங்களும் மாட்டப்பட்டிருந்தன. ஒரே சமயத்தில் உலகத்திலுள்ள அத்தனை பெண்களும் குளித்துக் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/105&oldid=560901" இலிருந்து மீள்விக்கப்பட்டது