பக்கம்:சமுதாய வீதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 2 3

தப்பாயிருந்தா மன்னிச்சுக்குங்க. நான் அந்த அர்த்தத்திலே சொல்லவே.

எந்த அர்த்தத்திலே சொன்னா என்ன? இன்னிக்கி எந்தக் கலையும் அந்தக் கலைக்காகவே இருக்கிறதாகத் தெரியலை. மந்திரி த ைல ைம வகிக்கிறதுக்காகவும் பேப்பர்வே நியூஸ் வர்றதுக்காகவும்தான் எல்லாமே இருக் கிறதாகத் தோணுது...'

இன்னொரு விஷயம்...உங்ககிட்ட ரொம்பப் பணி வாகக் கேட்டுக்கிறேன். நீங்க தப்பா நெனைக்க மாட் டிங்கன்னாத்தான் அதை நான் உங்களிடம் சொல்ல லாம்.'

'விஷயத்தையே சொல்லாம இப்படிக் கேட்டா உனக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்?'

"நீங்க கோபப்படாமல் பொறுமையாகக் கே ட் க. னும். அதை எப்படி உங்ககிட்டச் சொல்ல ஆரம்பிக்கிற துன்னே எனக்குத் தயக்கமா இருக்கு. நல்ல வேளையா இன்னிக்கி முதல் நாள் ரிஹர்ஸல்லே அப்படி எதுவும் நடக்கலை...'

எது நடக்கலை?'

"ஒண்ணுமில்லே! ரிஹர்ஸ்வின்போது கோபால் சார் என்னைத் தொட்டு நடிக்கிறதையோ. நெருக்கமாகப் பழகறதையோ, திடீர்னு நான் எதிர்க்கவோ, கடுமை யாக உணர்ந்து முகத்தைச் சுளிக்கவோ முடியாது. அதை யெல்லாம் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. நான் அபலை, என்னைத் தொடறவங்களை எல்லாமே நானும் தொட விரும்பறதா நீங்க நினைச்சுக்கக் கூடாது.'

இப்படிக் கூறியபோது ஏறக்குறைய அழுது விடுவது போன்ற நிலைக்கு அவள் குரல் பலவீனமடைந்து விட்டது. கண்களின் பார்வை அழாத குறையாக அவனை இறைஞ்சியது. அவன் அ வ ைள க் கூர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/125&oldid=560922" இலிருந்து மீள்விக்கப்பட்டது