பக்கம்:சமுதாய வீதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 篮莎葛

கூறிய் அந்த வாக்கியம் அவனை முற்றிலும் நெகிழச் ச்ெய்துவிட்டது.

எங்கூட நீங்க வராம வேறே யார் வருவாங்க?இந்த வாக்கியத்தில் இழைந்து ஒலித்த ஏக்கமும், தாபமும் அவன் உள்ளத்தை உருக்கின. அவள் தன்னோடு என்றும் துணையாகக் கூடவருவதற்கு அவனைத் தவிர வேறெவ ருமே இல்லையென்று நம்பிக்கையோடு நினைப்பதை அந்தக் குரவில் தெரிந்து கொள்ள முடிந்தது. அவளிடம் அவ்வளவு உரிமையோடு கோபப்படுவதற்கும் தாபப்படு வதற்கும் தான் யார் என்றும் எவ்வளவு காலமாகத் தான் அவளோடு பழகுகிறவன் என்றும் நினைத்துப் பார்த்த போது அது அவனுக்கு வேடிக்கையாகவே இருந்தது. அவ ளுடைய உரிமைகளைக் கட்டுப்படுத்தவும், தளர்த்தவும் செய்கிற அளவிற்குத் தான் அவள்மேல் அத்தனை பிடிப் பையும், பற்றையும் எப்போது கொண்டோம், எப்படிக் கொண்டோம் என்றெல்லாம் எண்ணியபோது அந்த மாறுதல் அவனையே அயரச்செய்தது. பிரியத்தையும், ஆசையையும் விடமுடியாத அளவுக்கு அவள் தன் மனத் தில் இணைபிரியாத பொருளாகியிருப்பதை அவனே புதி. தாக அப்போதுதான் புரிந்து கொள்வதுபோல் உணரத் தலைப்பட்டான். -

மாலையில் அப்துல்லாவை அழைத்துவரச் செல்வ தற்கு முன்னால் முத்துக்குமரனை போட்டோ ஸ்டுடியோ வுக்கு அழைத்தாள் அவள். ‘. . .

நான் மலேயாவுக்கு வரஸ்ை, இப் படம் ஒண் னும் எடுக்க வேண்டாம்' என்றான் முத்துக்குமரன்.

'நீங்க வரலையின்னா நானும் போகப் போற. தில்லே' என்றாள் அவள். . -

அவள் சொல்வியதை அவன் சிரித்துக் கொண்டே மறுத்தான்: .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/153&oldid=560950" இலிருந்து மீள்விக்கப்பட்டது