பக்கம்:சமுதாய வீதி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 227

விருந்து நடந்த இடத்திலிருந்து திரும்பும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. கோபாலும் அப்துல்லாவும் மொத்தமாக இவர்கள் இரு வரையுமே புறக்கணித்தது போல் நடந்து கொண்டார் கள். இவர்களோ தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவ்ர் :பு ற க் க ண த் த து பே ல் ந ட ந் து கொள்ளத் தொடங்கினர்.

அதன் பின் பினாங்கில் நாடகம் நடந்த மூன்று தினது களும் இதே நிலையில் பரஸ்பரம்-கோபால் மாதவியோடும் மாதவி முத்துக்குமரனோடும்-சுமூகமாகப் பேசிக் கொள் ளாமலே கழிந்தன. ஆறு மணியானதும் தியேட்டருக்குக் கார்களில் கூட்டமாகப் போகவும், கிரீன் குமுக்குள் நுழைந்து மேக்கப் போடவும், மேடையில் நடிக்கவும் நாடகம் முடிந்ததும் திரும்பவுமாக நாட்கள் போயின.

அப்துல்லாவின் நைப்பாசையை வேறொரு வகையில் திசை திருப்பிவிட்டுச் சமாளித்துக் கொண்டிருந்தான் கோபால். தன்னுடைய குழுவிலேயே உபநடிகையாக இருந்த உதயரேகா என்ற கட்டழகி ஒருத்தியை அப்துல் லாவோடு காரில் தனியே போகவும், அவருடைய அன் பைப் பெறவும் ஏவினான். உதயரேகா துணிந்த கட்டை, அவள் "தாராளமாகவே அப்துல்லாவைத் திருப்தி செய்து டேப்ரெகார்டர், டிரான்ஸிஸ்டர், ஜப்பான் தைலெக்ஸ் புடைவைகள், நெக்லெஸ், மோதிரம் என்று அவரிட மிருந்து பறித்துக் கொண்டிருந்தாள். முதல் நாள் அதுப வத்துக்குப் பின் முத்துக்குமரன்-நாடகம் நடைபெற்ற இடத்திற்குப் போவதை நிறுத்திவிட்டு மாலையில் அறை .யிலேயே இருக்கத் தொடங்கினான். தனிமையில் அவ. னால் சில கவிதைகள் எழுத முடிந்தது. மற்ற நேரங் களில்-மலேயாவில் வெளி வரும்-இரண்டு மூன்று தமிழ்த் தினசரிகளையும் ஒரு வரி விடாமல் அவன் படித் தான். நல்ல வேளையாக-அந்த நாட்டில் வெளி .யாகும் ஒவ்வொரு தமிழ் தினசரியும் நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/229&oldid=561030" இலிருந்து மீள்விக்கப்பட்டது