பக்கம்:சமுதாய வீதி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 23.3

  • * * *** * * * *

அவள் அவனருகே வந்து அவனுக்கு மட்டுமே கேட் கிற மெல்லிய குரலில், கெஞ்சுவது போல் வேண்டினாள்:

இந்தாங்க! வீணா மனசைக் கெடுத்துக்காதீங்க’ நான் இனி ஒருக்காலும் உங்களுக்குத் துரோகம் பண்ன மாட்டேன். இப்ப இந்த இடத்துலே நான் அநாதை, நீங்களும் இல்லேன்னா எனக்கு ய்ாருமே துணையில்லே.'
  • சக்தியில்லாதவனிடத்தில் அடைக்கலமாவதில் என்ன ԱԱյstr?"

"உங்களுக்குச் சக்தியில்லேன்னா இந்த உலகத்தி லேயே அது இல்லே, வீனா அடிக்கடி என்னைச் சோதிக் காதீங்க...

'ஏன் மூணு நாளா எங்கூடப் பேசலே?"

  • நீங்க ஏன் பேசலே?"

"நான் கோபக்காரன், ஆண் பிள்ளை...'

'அது தெரிஞ்சுதான் நானே முந்திக்கொண்டு வந்து இப்பக் கெஞ்சறேன்...'

  • நீ ரொம்பக் கெட்டிக்காரி...'

"அதுவும் உங்களாலேதான்...'

-கடுமை மறைந்து அவன் முகத்தில் புன்முறுவல் மலர்ந்துவிட்டது. அதற்குமேல் அவளிடம் அவனால் கடுமையைக் காட்ட முடியவில்லை, -

அருகே இழுத்து அவளை நெஞ்சாரத் தழுவினான் அவன். அவள் குரல் அவன் காதருகே கிளுகிளுத்தது.

"வாசற் கதவு திறந்திருக்கிறது." - "ஆமாம்! போய் அடைத்து விட்டுவா! அப்துல்லா பார்த்துத் தொலைக்கப் போகிறான், பணத்தின் ராஜா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/235&oldid=561036" இலிருந்து மீள்விக்கப்பட்டது