பக்கம்:சமுதாய வீதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 多蕊

-முத்துக்குமரன் எழும்பூரில் தான் தங்கியிருந்த லாட் ஜின் பெயரைச் சொன்னான்.

'நான் நம்ம டிரைவரைப் போய்ப் பில் பணத்தைக் கட்டிப்பிட்டு உன் பெட்டி படுக்கையை எடுத்தாறச் சொல்லிடறேன். இங்கேயே ஒரு அவுட் ஹவுஸ் இருக்குவாத்தியார் அதிலே தங்கிக்கலாமில்லே...? -

வாத்தியார் என்னடா வாத்தியார்? நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்னு பழையபடி ஸ்திரீ பார்ட் குரல்லேதான் ஒரு தரம் சொல்லேன்.'

--கோபால் அப்படிச் சொல்ல முயன்று குரல் சரியாக வராததால் பாதியில் நிறுத்தினான்.

'உன் குரல் தடிச்சுப் போச்சுடா கோபால். '

' குரல் மட்டுமென்ன? ஆளுந்தான்' சொல்லிக் கொண்டே டிரைவரைக் கூப்பிட வெளியே போனான் கோபால். அவனைப் பின் தொடர்ந்து சென்ற முத்துக் குமரன், ' ரூமை நல்லாப் பார்த்து என் ஐசுவரியம் எதை யும் விட்டுவிடாமே எல்லாவற்றையும் எடுத்துக்கிட்டு வரச்சொல்லு. நிகண்டு, எதுகை வரிசைப் புத்தகம் ரெண்டு மூணு இருக்கும்...' என்று எச்சரித்தான்.

'அதெல்லாம் ஒண்ணு விடாமே வந்து சேரும்; நீ கவலைப்படாதே...'

லாட்ஜ் ரூமுக்கு வாடகைப் பணம் தரணுமே?”

"அதை நீ தான் கொடுக்கனுமோ? நான் கொடுக்கப் படாதா வாத்தியாரே?'

-முத்துக்குமரன் பதில் சொல்லவில்லை. கோபா லின் டிரைவர் சிறிய கார் ஒன்றில் எழும்பூருக்குப் புறப் பட்டுப் போனான். அவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த கோபால் நண்பனை மிகவும் பிரியத்தோடு அணுகி, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நல்லாச் சேர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/27&oldid=560820" இலிருந்து மீள்விக்கப்பட்டது