பக்கம்:சமுதாய வீதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 3.5

னைத் தேடி எடுப்பது சிரமமாக இருந்தது. தலைப்பக் கத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி விளக்கைப் போட்டு விட்டு டெலிபோனை எடுத்தான் முத்துக்குமரன். எதிர்ப் புறம் ஒர் இனிய பெண் குரல்-பயமும், நாணமும் கலந்த தொனியில் ஹலோ” என்று இங்கிதமாக அழைத்து, ‘என்னை நினைவிருக்கிறதா?’ என்று வினாவியது. அந் தக் குரலை நினைவிருந்தாலும் அப்போதிருந்த நிலையில் யாரென்று பிரித்து நினைவுகூர் முடியாமலிருந்தது. அவன் பதில் சொல்லத் தயங்கினான்.

அவளே தொடர்ந்து ஃபோனில் பேசினாள்.

'....மாதவி...இண்டர்வ் யூக்கு முன்னால் உங்களோடு பேசிக்கொண்டிருந்தேனே, நினைவில்லையா?"

'ஓ..நீயா...?’’

-போதையில் ஏகவசனமாக நீ என்று வந்து விட்டது. ஒர் அழகிய சமவயதுப் பெண்ணிடம் அவள் யெளவனத்தையும், பிரியத்தையும் அவமானப்படுத்துவது போல் நீங்கள், ! உங்கள்-என்று பேச முடியாதவனாக அவன் அப்போது இருந்தான். அவன் பருகியிருந்த் மதுவைக் கசப்பாக்குவது போல் டெலிபோனில் அவள் குரல் இங்கிதமாய் நளினமாய்த் தேனாகப் பெருகி வழிந்தது.

'மன்னிக்கணும்...நீங்களா...? -என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவன் உரையாடலை மறு படி தொடர்ந்தபோது,

'முதல்ல கூப்பிட்டாப்பிலேயே கூப்பிடலாம்! அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...' என்று எதிர்ப்புறம் அவள் குரல் ஒய்யாரமாய்க் குழைந்தது. அந்தக் குழைவு, அந்த இங்கிதம், எல்லாம் சேர்ந்து முத்துக்குமரனை மேலும் மேலும் கர்வப்பட வைத்தன. வலிய அணைக் கும் சுகம் போலிருந்தது அவளுடைய பேச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/37&oldid=560830" இலிருந்து மீள்விக்கப்பட்டது