நா. பார்த்தசாரதி 59
வாசனையும் குளிரும் அவன் மனத்தில் அநுராக கீதம் இசைத்தன. -
5
நடந்து வரும்போதே அவளிடம் நிறையப் பேச வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவுட்ஹவுஸ் படி யேறி அறைக்குள் வந்ததும்...தயங்கி நின்றாள் மாதவி. அவளுடைய மிருதுவான சரீரம் அடுத்த கணம் முத்துக் குமரனுடைய அணைப்பில் சிக்கியது. -
என்னை விடுங்க. நான் சொல்லிக்கொண்டு போவ தற்குத்தான் வந்தேனாக்கும்...'
"இப்படியும் சொல்லிக்கொண்டு போகலாமில் லையா?"
-அவள் தன்னை அவனுடைய பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டாள். ஆயினும் அவள் உடனே அங்கிருந்து போக அவசரப்படவில்லை. மேலும் ஏதோ ஒப்புக்குச் சிரித்துப் பேசிக் கொண்டு நின்றாள். - -
'உனக்கும் போக மனசு இல்லே! எனக்கும் உன்னை விட மனசு இல்லை. இப்படித்தான் உட்காரேன்...'
"ஐயையோ மாட்டவே மாட்டேன். ஒரு நிமிஷத் திலே வரேன்னு சாரிட்டச் சொல்லிட்டு வந்தேன். சந்தேகப்படப் போறாரு; நான் உடனே வீட்டுக்குப் போகணும்--
முத்துக்குமரன் மறுபடியும் வளை குலுங்கும் அவளு டைய ரோஜாப்பூக் கைகளைப் பற்றினான். கடைந்து திரட்டிய பசுவெண்ணெய் போல் அந்தக் கைகள் மிக மென்மையாகவும் குளுமையாகவும் இருந்தன.
"உன்னை விடவே மனசு வரவில்லை மாதவி'