தா. பார்த்தசாரதி ፴፰
'அப்படியே கவனித்துக் கொள்கிறேன்-என்ற பாவனையில் தலையை ஆட்டிச் சிரித்தாள் மாதவி.
-எழுதி முடித்திருந்தவரை தன் கையெழுத்துப் பிரதி களை அவளிடம் கொடுத்து-டைப் செய்யச் சொன்னான் முத்துக்குமரன். அவள் அதை வாங்கிப் பார்த்ததுமே முதலில் அவன் கையெழுத்தைப் புகழத் தொடங்கினாள்: "உங்க கையெழுத்தே முத்து முத்தா ரொம்ப நல்லா யிருக்குதே!' -
அந்தக் காலத்திலே ஏட்டிலே எழுத்தாணியாலே எழுதிப் பழகின கையாச்சே? நல்லா இருக்காமே பின்னே வேற எப்படியிருக்கும்?' என்று அவனும் தற்பெருமை யாகச் சொல்லிக்கொண்டான். அவள் மேலும் அவனைப் புகழ்ந்தாள்.
உங்க தற்பெருமைதான் எனக்கு ரொம்பப் பிடிச் சிருக்கு, ' -
'உலகத்திலே கஷ்டப்படறதுக்குன்னே பிறக்கப் போற கடைசிக் கலைஞன் வரை சொந்தம் கொண் டாடறத்துக்கு அவனோட செருக்கு ஒண்ணுதான் அவனுக்குன்னு மீதமிருக்கு.'
"எத்தனையோ பேரிடம் செருக்கு இருந்தாலும் சில பேருக்குத்தான் அதுவே ஒரு வீரமாகவும் கபபீரமாகவும் இருக்கும்...'
புகழாபரணன்’னு பழைய தமிழில் ஒரு தொடரே உண்டு மாதவி!'
சொல்றதுக்கு ரொம்ப நல்லாயிருக்கு. புகழைத் தனக்கு ஆபரணமாக அணிஞ்சிக்கிறவங்கன்னு தானே இதுக்கு அர்த்தம்?’’ - - : ஆமா புகழே இன்னார் கழுத்திலே நாம் ஆப்ரண மாக அணி செய்யனும்னு ஆசைப்படற ஆள்’னும் அர்த்தம் சொல்லலாம்'-என்று அதற்கு விளக்கம்