பக்கம்:சமுதாய வீதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சமுதாய விதி

பாங்க... அதை விட்டுட்டு ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனிட்டப் போயித் தலையைக் கொடுக்கிறாரு. அவன் சரியான இழுபறிப் பேர்வழி. வீன்ஸ் எழுதி வாங்கறத்துக் குள்ளே திண்டாட்ப் போறாரு...'

"அது சரி! அங்கப்பன் வீட்டுக்கு அவன் போறது. சரிதான். நாமும் போகனுமா என்ன?’’

'கோபால் சார் விடமாட்டாரு, வற்புறுத்திக் கூப் பிடுவாரு..."

'நீ என்ன நினைக்கிறே: எனக்கு நாம ரெண்டு பேருமே போக வேண்டாம்னு தோணுது.'

அது நல்லாருக்காது. ஏற்கெனவே நேத்து விஷயத் திலே அவர் மனசுக்கு எரிச்சலாகி இருக்கு. இன்னிக்கு வேற ரெண்டு பேருமாச் சேர்ந்து வரமாட்டோம்னா ஒரு மாதிரி விட்டுத் தெரியும். நீங்களும் வரத்தான் வேணும். ஒரு வேளை நீங்க வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்ச்ா லும் நான் அவசியம் போகத்தான் போவேன். இல் லாட்டி வீண் மனஸ்தாபம் வரும்...'

‘'நீ போகக்கூடாதுன்னு நான் தடுத்தால், அப்ப என்ன செய்வே?...'

இங்கிதம் தெரிஞ்சவராயிருந்தா நீங்களே என்னை அப்ப்டித் தடுக்க மாட்டீங்க."

"நான் இங்கிதம் தெரியாத ஆளுன்னு சொல்ல வர்றியா நீ?" -

'அப்பிடி நான் சொல்லமாட்டேன், நீங்க. சொல் றதை எல்லாம் நான் செய்யக் காத்திருக்கேன். நான் செய்ய முடியாததை நீங்க சொல்லி அன்பை உறைச்சுப் பார்க்க மாட்டீங்கன்னு நான் நம்பலாமில்லையா?'

சரி: நானும் வந்து தொலைக்கிறேன். ஜில் ಮ"606 யும் அங்கப்பனையும் நானும்தான் பார்க்க வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/92&oldid=560887" இலிருந்து மீள்விக்கப்பட்டது