பக்கம்:சமுதாய வீதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9密

"பார்த்தியா அங்கப்பன்? எத்தினி பெரிய நடிகரை உன்னைத் தேடிக் கூட்டியாந்திருக்கேன்? மாமண்டூர்ச் சிங்கன் உலைக்களத்தைத் தேடி மும்மூர்த்திகளே வருவார் கள் என்று கம்பர் பாடி வச்சமாதிரி உன்னைப் பத்தியும் பாடலாம். அப்படிப்பட்டவங்கல்லாம் உங்கிட்ட வந்தி ருக்காங்க இன்னிக்கி."

காதில் சொருகியிருந்த பென்சிலை விஷமம் செய்து கொண்டே அங்கப்பன் அவர்களை வரவேற்றான். அந்தக் காலத்திலே கன்னையா கம்பெனி வீன்ஸ் எப்படி இருக்கும் என்பது தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டையிலே முக்கால் கப் காப்பி என்ற எகானமி டிரிங்க்' வசதி இருந்த பொற்காலம் வரை அங்கப்பனின் வரவேற்புரை யில அடங்கியிருந்தன. நடுவில்,

"அந்த நாளிலே ராமானுஜுலு நாயுடு கம்பெனி யிலே பலராம ஐயர்னு ஒருத்தர் ஸ்திரி பார்ட் கட்டுவாரு, இந்த அம்மா மாதிரியே, பார்த்தாலோ பேசினால்ோ கிளி கொஞ்சும். சிரிச்சா முத்து உதிரும் போங்கஎன்று மாதவியைச் சுட்டிக் காட்டிச் சம்பந்தமில்லாமல் மாதவியைப் புகழ்ந்து வைத்தான் அங்கப்பன்.

'நம்ம சார்கூட மதுரையிலே ஒரு பிரமாதமான பாய்ஸ் கம்பெனியிலே ஸ்திரி பார்ட் தான் போட்டுக் கிட்டு இருந்தாரு-என்று அப்போது ஜில் ஜில் குறுக் கிட்டுக் கூறியதைக் கோபால் அவ்வளவாக ரசிக்க வில்லை.

எதை மறந்தாலும் நான் ஸ்திரீடார்ட் போட்டதை மறக்க மாட்டிரு போலிருக்கு உனக்கு ஏன்யா எப்பப் பார்த்தாலும் ஸ்திரீகளைப் பத்தியே நினைப்பு?' என்று தன் கோபத்தை ஹாஸ்யம் போன்ற சொற்களின் வடி விலே மாற்றி வெளியிட்டான் கோபால்; அப்போது மாதவியும் முத்துக்குமரனும் ஒருவரையொருவர் குறிப் பாகப் பார்த்து நகைத்துக் கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/95&oldid=560890" இலிருந்து மீள்விக்கப்பட்டது