பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசியர்கள்

125


நிற்கும். இந்த கடைசியர்களோடு கலந்து அவர்களிடம் கடமையை வாங்கி உரிமையை கொடுக்க போராடினால் அல்லது குறைந்தபட்சம் இவர்களைப் பற்றி மனதில் நினைத்தால், உன் நினைவை ஆக்கிரமிக்கும் மாயாவை, நீ, நீக்க வேண்டிய அவசியமில்லை. அவளே விலகிக் கொள்வாள்.’

முத்துக்குமார், உடற்பயிற்சியாக நடக்கவில்லை என்றாலும் அந்த நடையே, அந்த உடலுக்குள் நீக்கமற நிறைந்த உள்ளத்தை ஒரளவிற்கு இடிதாங்கியாய் ஆக்கி இருக்க வேண்டும்.

சித்தப்பா பேசும்போது பயபக்தியோடு அதை கேட்டுக் கொண்டிருந்தான். அவர்மேலும் பேசவேண்டும் என்பதுபோல் அவரை அண்ணாந்து பார்த்தான்.

ஆனந்த விகடன் முத்திரைக் காழ் - 2001