பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குடி

154


காரணவான், அந்தஸ்து மாயிைலிருந்து விடுபட்டு, ஒரு சாதாரண மனிதனாய் வேட்டியை தார்பாய்த்தபோது, பிற தறவாட்டுக்காரர்கள் அவரை பிடித்துக் கொண்டு, உருட்டி மிரட்டி யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டினார்கள்.

“நீங்க சொல்வது நிசமாவே இருக்கட்டும். ஆனாலும் திண்டத்தகாதவன் திண்டுன பெண்ணை, ஒன்று வீட்டை விட்டுத் துரத்தணும். இல்லன்னா கண்டந்துண்டமா வெட்டிப் போடணும். இதுதான் நம்ம சாதி சாஸ்திர சம்பிரதாயம். அப்படிச் செய்யாது போனால், ராஜ தண்டனைக்கு ஆளாக வேண்டியது வரும். சித்திரை திருநாள் மகாராஜா, இங்கே வந்து கோட்டையில் முகமாமிட போகிறாராம். உங்களுக்கு உடந்தைன்னு நாங்களும் ராஜ கோபத்திற்கு உள்ளாக வேண்டியது வரும். எப்படியோ நம்ம அந்தஸ்துள்ள சாதிக்காரர்கிட்டதான் அவள் அடிமைப் பட்டிருக்காள். இப்படி நினைச்சு மனச தேத்திக்குவோம். இல்லாட்டி நம்மள கழுவுலகூட மகாராஜா ஏத்தலாம்.”

காரணவான் வாயடைத்துப் போனார். இதற்குள் தனித்துவிடப்பட்ட இகச்சி மாடத்தி, புலமாடன் மீது பாய்ந்தாள். அவன் தலையை முடியோடு சேர்த்து பிடித்து உலுக்கினாள். அவன் முகத்தில் காறிகாறித் துப்பினாள். மலையாளமும் தமிழும் கலப்பு மொழியாகாமல் முற்றிலும் மாறான கூட்டாகி அழுகிப்போன ஒரு புதுமொழியில் அவள் ஏதேதோ பேசினாள். அதன் சாரம் இப்படிதான் இருக்க வேண்டும்.

“என்னை மாதிரி அம்மையை ஆக்கிட்டியே. நமக்காக இரக்கப்படுற தாயாச்சே. நான் இப்ப எப்படி துடிக்கேனா அப்படித்தானே அம்மா துடிப்பாள். நீ உருப்படிவியா. புலப்படுவியா.”

புலைமாடனுக்கு, தான் செய்த காரியத்தின் தாத்பரியம் அப்போதுதான் புரிந்திருக்க வேண்டும். கையிலிருந்த சக்கரங்களை வீசியடித்தான். ஆறுமுகப்பெருமாளோ சட்டம் பேசினார்.