பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குடி

155


“நீ சக்கரத்த வீசினாலும் சரி, விழுங்கினாலும் சரி. உன் அடிமையை நான் வாங்குனது வாங்குனதுதான். இந்த சவுத்து மூளி மாடத்திய ஒரு போடு போடுங்கடா.”

இசக்கி மாடத்தி, அடி, உதை வாங்கிக் கொண்டிருந்தபோது, புலைமாடன், ஒரு மதயானையைபோல் ஆறுமுகப் பெருமாளை நோக்கி, தலையை அங்குமிங்குமாய் ஆட்டி நடந்தான். அவர் பயந்துபோய் பின்வாங்கினார். கூட்டம் லேசாய் சிதறியது. அப்போது அச்சத்தால் நடுங்கிய ஒரு ஏவலாளியின் கையில் ஆடிய மூங்கில்தடி, புலைமாடனின் கண்முன்னால் அங்குமிங்குமாய் ஆடியது. காலங்காலமாக அடி உதை பட்ட அவனுக்கு, அதுவே அங்குசமாகியது. உடனே லேசாய் எரியப் போன ஐம்பொறிகளும் அணைந்து போயின. திடீரென்று நெடுஞ்சாண் கிடையாய் தரையில் விழுந்து அங்குமிங்குமாய் தவழ்ந்து ஒவ்வொருவர் காலையும் தொட முயற்சித்தான். அவனால் திட்டு ஏற்படும் என்று ஒவ்வொருவரும் விலகி விலகி போனார்கள். அதற்குள் ஆறுமுகப் பெருமானின் காவலாளிகளில் இரண்டு மூன்றுபேர், அவனை பன்றிைைய இழுப்பதுபோல் தரையோடு தரையாக இழுத்து, கொல்லைப் பக்கமாக கொண்டுபோய், கை, கால்களை கயிற்றால் கட்டி அந்த கயிறை தறவாட்டு மரம் ஒன்றில் கட்டி விட்டு திரும்பினார்கள்.

பாருக்குட்டி, ஆறுமுகப் பெருமாளுக்கே அடிமை என்பது கூட்டத்தின் மவுன சம்மதத்தின் மூலம் நிச்சயமாகிவிட்டது. தறவாட்டு காரணவான்களும் அவர்களது கையாட்களும், காலாட்களும் கண்முன்னால் நடக்கப் போகிற அந்த விபரீதத் தொடரை பார்க்க விரும்பாதவர்கள் போல், தத்தம் வீடுகளுக்கு திரும்பிக்

சித்திகளும், தமக்கைளும் இன்னும் மயக்கம் தெரியாத குஞ்சம்மாவை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள். காரணவான் நந்திஸ்வரன் கண்ணிரும் கம்பலையுமாய் வீட்டுக்குள் பாய்ந்தார். அம்மாயி மட்டும் அங்கேயே நின்றாள்.