பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

சமுத்திரக் கதைகள்


கவலைப்படவில்லை. சொல்லப் போனால், சந்தோஷப் பட்டாள். அவளைக் கவனிக்க ஆளில்லாமலும் இல்லை. எதிர் வீட்டு இளைஞன் ஒருவன் வாரப்பத்திரிகைகளையும், சினிமாப் பத்திரிகைகளையும் அவளுக்குத் தாரளமாகக் கொடுத்தான். அவளும், சிலசமயம் வலி யப் போய் அவனிடம் பத்திரிகை வாங்குவாள். கவர்ச்சிக் கன்னிகளைத் தாங்கிய வாரப் பத்திரிகைகள், அவளுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை, என்றாலும், உள்ளே அரை குறை ஆடையில் இருந்த பெண்களை அணைத்துக் கொண்டிருக்கும் ஆண்களின் படங்களைப் பார்த்து, அவள் மெய் மறந்தாள்.

சினியம்மையும் முன்னேறிவிட்டாள். விஷயங்களை விவாதிக்கும் அளவிற்கு முன்னேறி விட்டாள்.

ஒரு செடி மறைவில், ஸ்கர்ட் அணிந்த ஒரு பெண்ணை ஒரு வாலிபன் அணைத்துக் கொண்டே சில்மிஷம் செய்யும் படத்தைக் காட்டி, அவள் எதிர்வீட்டு வாலிபனிடம் விவாதிக்கும் அளவிற்கு, தனது பொது அறிவை வளர்த்துக் கொண்டாள். குமாரி எச்.எல்.கிதா, அவங்க பார்க்கில் நடந்துக்கிற விதத்தை நல்லா வர்ணிச்சிருக்கிறாள்’ என்று அவளும், புடில்யன் “அவள் முழங்காலில் இருந்து அவன் கை” என்ற இடம் பிரமாதம் என்று அந்த அண்ணலும் உரையாடிக் கொள்வார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒரு வாரப்பத்திரிகை! விதவிதமான கவர்ச்சிக் கதைகள்! சமுதாயத்தில் அந்தஸ்துள்ள எழுத்தாளர்கள் படைக்கும் புரட்சிகரமான காதல் கதைகள் ஆஹா... காதலுக்கு எத்தனை சக்தி! எழுத்தாளர் சாந்தா கிருபாகரன், சின்னச்சிறிசுகள்

கொட்டமடிக்கிறதை எப்படி வர்ணிக்கிறாள்!

மாடசாமியும் முன்னேறிக் கொண்டே இருந்தார். இப்போதெல்லாம், தொழில் விஷயமாக அடிக்கடி கேம்ப் போய்விடுவார். பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்கும், குதிரைகள் அவரை இழுத்தன.