பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

சமுத்திரக் கதைகள்


ஒருத்தி பேசும்போது, இன்னொருத்தி இடைமறிக்காமல், அதே சமயம், அந்த ஏச்சுக்களைக் காதுகளில் உள்வாங்கிக் கொள்வது போல், நிற்பாள். பின்னர் உடனடியாக எதிர் ஏச்சு விடப்படும். சடுகுடு ஆடுவதுபோல், இருவரும் திட்டிக் கொண்டார்கள். சினியம்மா, வைது கொண்டே முன்னோக்கி நடக்கும்போது, சக்கரையம்மா அதைக் காதில் வாங்கிக் கொண்டே பின்னோக்கி நடப்பாள். பிறகு சினியம்மா, மூச்சு விட்டுக் கொண்டு பின்னோக்கி நடக்கும்போது, சக்கரையம்மா முன்னோக்கிப் போவாள். இருவரின் இருபது விரல்களும், முளைக்கம்பி மாதிரி வீறிட்டுத் துடித்தன.

அதே சமயம், இருவரும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியைத் தாண்டிப் போவதில்லை. இருவரையும் ஒப்புக்குப் பிடித்த உறவுக்காரப் பெண்கள், அடுத்த தரப்பைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினார்கள். இவள்கள் மட்டும், அவள்களைப் பிடித்து இழுத்தால், சண்டை எப்போதோ ஒய்ந்திருக்கும். ஆனால், ஒவ்வொருத்தியின் பின்னாலும், இவள்கள் நின்று கொண்டு ஒவ்வொரு கோழியும் நகரும்போது தங்களையும் ரசனையோடு நகர்த்திக் கொண்டார்கள். இந்த ஒத்தாசைப் பெண்களை ஒட்டி, அவள்களின் பிள்ளை குட்டிகள்... கல்லையும், கட்டியையும், வைத்துக் கொண்டு தயாராய் நின்ற எலிவால் பின்னல் சிறுமிகள்... எக்கிய வயிற்றுப் பயல்கள்.

தொலைநோக்காய்ப் பார்ப்பவர்களுக்கு, அந்த இருவருமே அசப்பி ல் ஆண்களைப் போலவே தோன்றுவார்கள். சினியம்மாவின் கழுத்தைச் சுற்றி பாம்புபோல் சுருண்டு கிடந்த சேலையின் சிவப்புக்கரை, அசல் ஆம்புளைத் துண்டு போலவே தெரிந்தது. சக்கரையம்மாவின் மாராப்புக் கிழே விழ, அவளோ பனியன் போட்டிருப்பது போல் எதுவும் இல்லாமல் தோற்றம் கொடுத்தாள். ஆனாலும், அவர்களுக்குள் இந்த ஆம்புளைத் தனமும், உறவு முறையும் தவிர்த்து ஏகப்பட்ட வித்தியாசங்கள்.

சினியம்மா உயரமானவள். ஒல்லியானவள்: கண்களை ஒரங்கட்டிப் பார்க்கும் கோயக்கண்ணி கழுத்து மட்டும் ஒரு முழம்