பெண்களுக்கான சொத்துரிமை மறுப்பு இன்றைய பெண்ணியப் போராளிகளின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வில்லை. பெரும்பாலான பெண்ணிய போராளிகளுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில், மாராப்பு போடும் உரிமை கேட்டு 35 ஆண்டுகாலம் எளிய பெண்கள் நடத்திய போராட்ட வரலாறு தெரியாது.
பெண்ணியம் என்பது நடுத்தர வர்க்கத்திலிருந்து விடுபட வேண்டும். தோள் சீலைப் போராட்டமே பெண்ணியப் போராட்டத்தின் வரலாற்றில் பிள்ளையார் சுழியாக இருக்க வேண்டும்.
|
சீர்வரிசை முகமூடிகள்
பெண்ணியம் பெரிதாகப் பேசப்படுகிற காலம். இன்னும் அதிகமாகப் பேசப்பட வேண்டிய காலக்கட்டம். எல்லாச் சமயங்களும் முடக்கிவைத்த பெண்ணினத்தின் இன்றைய தலைமுறை, பெண்ணியக் கத்தை விடுதலை வேள்வியாக நடத்தி வருகிறது. உடன்கட்டை என்ற பெயரில் பெண்களை, இறந்த கணவனின் சிதையில் சேர்த்து எரித்ததுபோன்ற கடந்தகால சுமையோடு, ‘சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை ஆண் பிள்ளையே’ என்ற பழமொழி ஊர் முழுக்க நிலவும் நிகழ்கால விலங்கோடு, தவிப்பது தெரியாமலே தவிக்கிறது பெண்ணினம். இதன் போராளிகள், தங்களுக்காகவும், தங்களது சகப்பெண்களுக்காகவும் போராடி வருகிறார்கள். இது வரவேற்கத் தக்கது. பொதுவாக, அடிமைப்பட்ட நாடோ அல்லது இனமோ தங்களை அடக்கி வைத்த அந் நியர்களுக்கு எதிராகவே போராட வேண்டிய கட்டாயம் உண்டு. ஆனால், பெண்களுக்கோ தங்களது உரிமைப் போராட்டத்தை குடும்பத்தினருக்கு எதிராகவே நடத்த வேண்டிய, விருப்பத்திற்கு விரோதமான சூழல் நிலவுகிறது.
|