உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தலித் மக்களின் சமூகப்
பொருளாதார எழுச்சியை,
பிற்படுத்தப்பட்ட மக்களால்
சகிக்க முடியவில்லை. ஒரு
காலத்தில் இப்போதைய தலித்
மக்களைப் போல் பல சிறுமை
களை அனுபவித்த பிற்படுத்தப்
பட்டோர் தங்களது சாதிய
வரலாறை திரும்பிப் பார்க்க
வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகுதான்
தலித் மக்கள் அரசு சலுகை
களால் மேன்பட்டு வருகிறார்கள்.
ஆகையால் அரசையோ,
சமூகத்தையோ முற்றிலும்
தலித் விரோத நிறுவனங்களாக
நினைக்கலாகாது.

மிளகாய்ச்
சாதமும் மூங்கில்
கம்புகளும்

தமிழகத்தில் தலைவர்களின்
சிலைகளை - குறிப்பாக டாக்டர்
அம்பேத்கர், பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர்
சிலைகளை உடைப்பதும், இதற்கு
எதிர்வினையாக, சாலை மறியல்,
பேருந்துகளில் கல்லெறிதல்,
எதிர்ச் சாதிக்காரர்களின்
அமைப்புக்களைத் தாக்குதல்,
காவல் துறையினரின் தடியடி
போன்றவை அன்றாட நிகழ்வுகள்
ஆகிவிட்டன. இவற்றோடு
நம்மால் வாழமுடியாது
ஆகையால் இதற்கு வழிகண்டாக
வேண்டும். அதற்கு முன்னதாக
தமிழ்ச் சமூக சாதிய வரலாற்றை
உணர வேண்டும்.

தமிழக சாதிய வரலாறு

இந்தியாவிலேயே, பிற
மாநிலங்களோடு, ஒப்பிடும்போது
ஏணி வைத்தாலும் எட்ட
முடியாத அளவிற்கு அதிக
எண்ணிக்கையுள்ள சாதிகள்
உலவி வரும் இடம் தமிழகம்
ஒன்றே. இந்த நூற்றாண்டின்
துவக்கத்தில் அரசு எடுத்த மக்கள்