உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


போராளிக் கவிஞர்
சாலய்யார் சிறிது விட்டுக்
கொடுத்திருந்தால், அவரது
தகுதிக்குரிய பல்கலைக் கழகத்
தலைவர் பதவி உள்ளிட்ட பல
பொறுப்புகள் அவருக்கு
வந்திருக்கும். ஆனாலும், மெய்ப்பொருள்
என்பது பதவியைவிட மேலானது
என்று திட்டவட்டமாகக்
கருதியவர்; கடைபிடித்தவர்.
எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு
மேலானது அல்ல என்று உறுதிபட
நம்பியவர். வாய்ப்புகளை புறந்
தள்ளிய ஒரு போராளித் துறவி
சாலய்யார்.

போராளித் துறவி
சாலய்யார்...

பேராசிரியர் சாலய்.
இளந்திரையனார் அவர்களைக்
குறித்து, இந்தக் கட்டுரையை
எழுதும் இந்தத் தருணத்தில், நான்
நெகிழ்ந்தும், குழைந்தும் போகிறேன்.
அவரோடு சம்பந்தப்பட்ட எனது
உறவாடல் நிகழ்ச்சிகளை நினைத்துப்
பார்க்கிறேன். பொதுவாக கடந்தகால
நிகழ்ச்சிகள் மனதில் மங்கலான
சுவடுகளாகவே தெரியும். ஆனால்,
சாலய்யாரைப் பற்றிய எனது
நினைவுகள் முன்னைய
நிகழ்ச்சிகளைவிட வலுவான
நிகழ்ச்சிகளாக, மனதில் மறு
காட்சிகளாய்த் தோன்றுகின்றன.

1966ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம்.... நான் புதுதில்லியில்
வானொலி அமைப்பின் செய்திப்
பிரிவில் உதவி ஆசிரியராக
பொறுப்பேற்ற வேளை. என்
பணியிடத்தில் எனக்குப் பெரிய
அதிர்ச்சியே காத்திருந்தது. அங்கு
பணியாற்றிய மேட்டுக்குடி
தமிழர்கள் என்னைப் பகைப்
பார்வையாகவே பார்த்தார்கள். என்
மொழி பெயர்ப்பை சிதைத்து, என்
மனதைச் சிதைக்க முயற்சித்தார்கள்.
பிறமொழி மேலதிகாரிகளுக்குப்