பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அரவாணிகள்

இவர்கள் அவர்கள் அல்ல ஆண்மையற்றவர்கள், ஒரு ஆணுக்குரிய சகலத்தோற்றத்தோடும் அறிவோடும் விளங்குவார்கள். அதேசமயம் இவர்களுக்கு பாலுணர்வு முற்றிலும் கிடையாது. இவர்களை நகரங்களில் ஒன்பது என்றும், தென் மாவட்டங்களில் பெத்தட்டிகள் என்றும் குறிப் பிடுவார்கள் இதேபோல் ஒரினச் சேர்க் கையில் ஈடுபடுகிறவர்கள், சராசரி சிறுவர்களாகத் துவங்கி, வக்கரித்தப் பெரிசுகளின் பணத்திற்கும், பண்டங்களுக்கும் மயங்கி, ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டு, பிறகு அந்த ரசனைக்கே அடிமையானவர்கள். இவர்களை, சென்னை நகரத்தின் பூங்காக்களிலும், கடற்கரைச்சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் மெல்லிய ஆடல் பாடலோடு பார்க்கலாம்.

இங்கே குறிப்பிடப்படுகிற ‘ஆண் உடம்பின் கைதிகள் இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். அவர்கள் ஆக்கப்பட்டவர்கள். இவர்கள் பிறவியிலேயே ஆனவர்கள். இவர்கள்தான் அலிகள். இப்போது தங்களை அரவாணிகள் என்று அழைக்க வேண்டுமென்று சங்கம் அமைத்து வேண்டுகோள் விடுப்பவர்கள்.

இந்த அலிகள் ப்படித் தோன்றுகிறார்கள்?

பூப்படைந்த பெண்ணிற்கு மாதம் ஒரு தடவை கருப்பையில் ஒரு முட்டை உருவாகிறது. உடல்சேர்க்கையின் போது ஆணின் ந்தில் உள்ள கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் இந்த கருமுட்டைக்குள் ஊடுருவப் போட்டியிடுகின்றன. இதற்காக இந்த முட்டையை முற்றுகையிடுகின்றன. இவற்றில் ஒன்றே ஒன்றுதான் முட்டைக்குள் சேருகிறது. இந்த உயிர் அணுவில் குரோமோசோம்கள் என்ற திரள்கள் உள்ளன. இவற்றில் பாதி ஆண்தன்மை உள்ளவை. எஞ்சிய மீதி பெண்தன்மை உள்ளவை. முட்டை இயல்பிலேயே பெண்தன்மையானது. இந்த முட்டையில் ஆண்தன்மையுள்ள குரோமோசோம் இணைந்தால், கருமுட் ை, ஆண்குழந்தையாகிறது. பெண்தன்மை உள்ளது சேர்ந்தால் குழந்தை பெண்ணாகிறது. ஆக ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது ஆண்தானே அன்றி, பெண்ணல்ல; (ஆனாலும் இந்த ஆண்களும் இவர்களது அம்மாக்களும், ஆண்குழந்தை பெற்றுத்தரவில்லை என்று குற்றஞ்சாட்டி மாட்டுப் பெண்ணை மாடாக்கி விடுகிறார்கள்.)

இத்துடன் இன்னொரு முக்கியமான சங்கதி. பெண்தன்மை கொண்ட கருமுட்டையும், ஆண் அல்லது பெண்தன்மை கொண்ட