உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


புதுடெல்லியிலுள்ள அரசு
அலுவலர்களிடம் ஒரு பழக்கம்.
கோப்புகளை பார்ப்பதில்லை என்ற
பழக்கம். காலை பதினோரு
மணிக்கு முன்போ, மாலை
நான்கு மணிக்கு பின்னரோ
அலுவலகத்தில் இருப்பதில்லை
என்ற சபதம்.


ஆனால், நேரில் போய்
விட்டால், நம்மை உட்காரச்
சொல்லி தேநீர் வாங்கிக்
குடுத்து, எந்தப் பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் அப்போதுதான்
கோப்பை படித்து விட்டு
உடனடியாக உதவுவது அவர்களது
பண்பாடு.

வீட்டைக்
கட்டிப் பார்!

எந்தக் காலத்திலோ,
‘கடன்படத் தயார்’ என்று
விண்ணப்பித்து, அந்த நாளே
மறந்துபோன சமயத்தில், அரசு என்
விண்ணப்பத்தை அங்கீகரித்து வீடு
கட்டக் கடன் தொகை
‘ஸாங்க்க்ஷன்’ செய்தது. அந்தச்
சமயம் பார்த்துப் பதவியுயர்வு
என்ற பெயரில் நான் சென்னையிலி
ருந்து பெங்களூர் போகும்படி
ஆகிவிட்டது. மொத்தக் கடன்
எழுபதாயிரம் ரூபாயில்,
இருபதாயிரம் ரூபாய் வந்து
சேர்ந்தது. பெங்களூரில் எப்படி
வீடு கட்டுவது என்று நான்
யோசித்த போது, என் மனைவி
‘நீங்க... இங்கே இருந்தால் மட்டும்
வீடு கட்டுவீங்களாக்கும். எழுத்துல
கோட்டை கட்டுறது வேற...
நிலத்துல வீடு கட்டுறது வேற’
என்றார். இதனால், என்
மனைவியையே ‘ஐடியா’ கேட்டேன்.
உடனே அவர் ‘அப்பா... எங்கப்பா...’
என்றார். நெல்லை மாவட்டத்தில்
கோவங்கோடு என்ற கிராமத்தில்
உள்ள என் மாமனாரை
வரவழைத்தோம். சென்னைக்கு
அருகே உள்ள குன்றத்தூரில்
வசிக்கும் என் சகலபாடி (அதாவது
சட்டகர்) லிங்கசாமி, தனது