உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஊனமுற்றோர், வாதாடி -
போராடி, அரசை ஓரளவு
நிர்ப்பந்திக்க முடிகிறது. ஆனால்
மனநோயாளிகள் இதற்கு
மாறானவர்கள். இந்த,
உள்ளத்தில் ஊனமுற்றோர்
தங்களுக்காக வாதாடவும்
முடியாது... போராடவும்
முடியாது—


இவர்களை பராமரிக்க
வேண்டியவர்களும், ஒரு
கட்டத்தில், இவர்களை சுமை
போலவே நினைக்கிறார்கள்.
இவர்களிலும் ஏழை-எளியவர்
வீடுகளில், குழந்தை மன
நோயாளிகள் பிறந்தால் அதற்குப்
பெயர் சித்திரவதை.

ஒரு மனநோய்ச்
சிறுவனுக்காக...

‘உருவுகண்டு எள்ளாமை
வேண்டும்’
என்று ஒளவையார்
அறிவுறுத்தினார். இதனால்
அந்தக்காலத்திலேயே ஊனமுற்ற
வர்கள் ஏளனம் செய்யப்பட்டார்கள்
என்பது புலனாகிறது. கூடவே
இத்தகைய போக்கிற்கு ஒரு
எதிர்ப்பும் இருந்துள்ளது. நமது
தமிழில் காதுகேளாதவர்கள்,
பார்வை அற்றவர்கள், கால், கை
இழந்தவர்கள் போன்றவர்கள்
மோசமானவர்கள் என்பதுபோல்
பழமொழிகளும் உள்ளன. இங்கே
இவற்றைக் குறிப்பிடுவது, அவற்றை
அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும்.
எனவே தவிர்க்கப் படுகிறது.
இப்போதும், வெந்த புண்ணில்
வேலைப்பாய்ப்பது போல் இந்த
மக்களை நகைச்சுவை என்ற
பெயரில் தொலைக் காட்சிகளிலும்,
திரைப்படங்களிலும் கேவலமாகச்
சித்தரிக்கிறார்கள். இத்தகைய மக்கள்
விரோதக் கலைச்சிதைவு வெளிப்
பாடுகளைக் கொண்ட திரைப்
படங்களையும், நாடகங்களையும்
அரசாங்கத் தொலைக்காட்சிகூட
ஒளிபரப்பி மனிதநேய எதிரியாக
விளங்குகிறது. என்றாலும்,
இத்தனை இழிவுகளையும், மீறி
ஊனமுற்றோர் உலகெங்கும் எதிர்க்