1204 சரனம் சரணம்
யில் இருப்பார்கள் என்ற கருத்தை உடையது. தாயர்பல பிறவிகளில் வெவ்வேருக வரும் தாய்மார்கள். மங்குவர் - மங்கச் செய்வர்; தன்வினை பிறவினைப் பொரு ளில் வந்தது. மண்ணில்-உலகத்தில். வழுவாதவருமல் வருகின்ற பிறவியை மங்குவர். டவர் ஆழியைச் சொன்கு லும் உபலட்சணத்தால் மற்றக் கடல்களையும் கொள்ள வேண்டும். உந்தி என்றது நாபியைக் குறிக்கும்; இங்கே ஆகு பெயராய் வயிற்றைக் குறித்தது. கொங்கு இவர் குழலாள். பூங்குழலாள் எனத் தனித்தனியே கூட்டுக, கொங்குஇவர் என்பதைப் பூவுக்கு அடையாகவும்கொள்ள ாைம். குறித்தவர்-நினைப்பவர்: தியானிப்பவர்.) -
அடியவர்கள் இகம், பரம், வீடு என்ற மூன்று பயன் ககாயும் பெறுவார்கள் என்று முன்பு ஒரு பாட்டிலும் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
‘தண்ணளிக் கென்றுமுன் னே பல கோடி தவங்கள் செய்வார் மண்அளிக் கும்செல்வ மோபெறு வார், மதி வானவர்தம் விண்அளிக்கும்செல்வ மும் அழி
யாமுத்தி வீடும் அன்றாே? பண்அளிக் கும் சொற் பரிமள
யாமளேப் பைங்கிளியே..?? (15)
அம்பிகையை வழிபடுபவர்கள் பதமுக்தியையும் பர முக்தியையும் முறையே பெறுவார்கள் என்பது இப்பாட வின் கருத்து. .
அபிராமி அந்தாதியில் 75-ஆம் பாடல் இது,