பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சரிந்த சாம்ராஜ்யங்கள்


 ஆகியவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்கள்.

எதிரிகளின் குண்டுகளின் தாக்குதலால் வாய்பிளந்து தண்ணீரைக் குடித்துக் கடலின் அடிவாரத்திலே கண் கலங்கிக்கொண்டிருக்கும் மரக்கலங்கள், போர் மூண்டதால் நெடுநாட்கள் புகைவிட முடியாமல் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கும் புகைப் போக்கிகள்.

மக்கள் மடிந்தாலும் தங்கள் மகோன்னத வாழ்வுக்கு முடிவேற்பட்டால் செங்கோலைப் பிடிங்கி மன்னன் செல்லுயிரைப் போக்கும் சீலமற்றவர்கள் விதைத்தவினையால் வீழ்ந்து விட்ட சாம்ராஜ்யங்கள், மதக் கோட்டை ஆட்டங் காண்பதைக் கண்டு வாளாவிருந்த மன்னர்களின் மண்டையில் தேளெனக் கொட்டித் தங்கள் தோளை உயர்த்திக்கொண்ட சண்டாளர்கள் செய்த சதியால் சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், அவைக்களத்தில் ஏதோ அவசர வேலையாக இருந்த மன்னன் தன்னை அவமதித்தான் என்ற மன எரிச்சலால் அரசுரிமையை மாற்றானுக்கு ஆக்கித்தந்த மடையர்களால் மண் மேடுகளான கோட்டைக் கொத்தளங்கள், மருந்தடைக்கும் பீரங்கியின் வாயில் மண்ணையும் கல்லையும் அடைத்து வெடிக்க ஒட்டாமல் தடுத்து வேடிக்கைப் பார்த்த வேதியர்களால் வேதனைக் குள்ளான வேந்தர்களின் கல்லறைகள், காலத்தால் செய்த நன்றியை ஞாலத்திலும் பெரிதென எண்ணாமல் கண நேரத்தில் தன்னக் காப்பாற்றியவனைக் காட்டிக் கொடுத்த கயவர்களால் வீழ்ந்து விட்ட கற்கோட்டைகள் ஆகிய இவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்கள்.