120 சர்வ சமயச் சிந்தனைகள்
தூண்டா விளக்கின் சுடரனையாய்
தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே. - மாணிக்கவாசகர்
- மனமெனும் தோணி பற்றி
மதியெனும் கோலை யூன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஒடும் போது
மதமெனும் பாறை தாக்கி
மறியும்போதறிய வொண்ணாது
உனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே. -திருநாவுக்கரசர்
- எவ்வுயிரும் என்னுயிர்பேல் எண்ணி இரங்கவும்நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.
தாயுமானவர் அன்பர்பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தான்ே வந்தெய்தும் பராபரமே. - தாயுமானவா எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே.
தாயுமானவர் தம்முயிர்போல் எவ்வுயிருந் தான்ென்றுதண்ணருள்கூர் செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே.
- -தாயுமானவர் * கடவுளே, என்னைப் பொய்யிலிருந்து மெய்க்கு அழைத்துச் செல்லும் இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும்; மரணத்திலிருந்து அமரத்துவத் துக்கு அழைத்துச் செல்லும். கி