ஆசுகார் ஒயில்ட்டு . 16
முதல் வீரன் :
என்ன ஆரவாரம் காட்டு விலங்குகளைப் போல
ஊளையிடும் அவர்கள் யார்?
இரண்டாவது வீரன் :
யூதர்கள், அவர்கள் எப்போதுமே இதுபோலத்தான்.
மதத்தைப் பற்றிப் பிணக்கிடுகிறார்கள்.
முதல் வீரன் :
மதத்தைப்பற்றி ஏன் பிணக்கிடுகிறார்கள்?
இரண்டாவது வீரன் :
நான் சொல்லேன். அவர்கள் எப்போதும் பிணக்கிடு
கிறார்கள். எடுத்துக்காட்டாக பாரிசீயர்கள் தேவதைகள் இருப்
பதாகச் சொல்லுகிறார்கள். சடுசியர்கள் கிடையாதென்று
சொல்லுகிறார்கள்.
முதல் வீரன் :
இதைப்பற்றி எல்லாம் பிணக்கிடுவது எள்ளலாகும்.
சிரியா இளைஞன் :
மன்னன் மகள் சலோம் இன்றிரவு எவ்வளவு அழகாக
இருக்கிறாள்!
மன்னியின் பணியாள் :
நீ எப்போதும் அவளையே பார்த்துக்கொண்டு இருக்
கிறாய். நீ அளவுக்கு மிஞ்சி அவளை நோக்குகிறாய். அந்த நிலை
மையில் இருப்பவர்களைப் பார்ப்பது தொல்லை. ஏதாவது
அஞ்சத்தக்கது நிகழலாம்.
சிரியா இளைஞன் :
இன்றிரவு அவள் அரும்பேரழகியாய் இருக்கிறாள்.