இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆசுகார் ஒயில்ட்டு 22
இரண்டாவது காவலாள் :
மன்னி எரோதியாவின் முதல் கணவனும், இப்போதைய மன்னனின் அண்ணனுமாகிய முன்னாள் அரசர், அதில் பனிரெண்டு ஆண்டு சிறையுண்டிருந்தார். அப்படி இருந்தும் சிறை அவர்ைக் கொல்லவில்லை. தம்பி அவருடைய கழுத்தை முறித்துக் கொல்லச் சொன்னார். காப்படோசியன் :
கழுத்தை முறித்துக் கொல்லும்படியாகவா? யார் செய்தது அதை? இரண்டாவது வீரன் :
(கொலைஞனைச் சுட்டிக் காட்டியவாறு) . அதோ நிற்கிறானே அவன். அவன் பெயர் நாமன்.
காப்படோசியன் :
அவன் அஞ்சவில்லையா ? இரண்டாவது வீரன் :
இல்லை, இல்லை. அரசன் தன் கணையாழியை அவனுக்கு அனுபினான்.
காப்படோசியன் :
என்ன கணையாழி?
இரண்டாவது வீரன் : -
கொலைத்தண்டனைக் கணையாழி. அதனாலே, அவன் அஞ்சவில்லை.
காப்படோசியன் :
என்ன இருந்தாலும், கழுத்தை முறித்து ஒர் அரசனைக் கொல்லுவது அஞ்சத்தக்கது.